பலாங்கொடையில் பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 17 வயதுடைய மாணவிகள் மூவர் காணாமல் போயுள்ளதாக பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
நேற்று (31) தனியார் வகுப்பிற்குச் சென்றிருந்த சந்தர்ப்பத்திலேயே குறித்த மாணவிகள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படும் மாணவிகள் கௌசல்யா, சர்மிளா மற்றும் சதுனி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பலாங்கொடை பொலிஸார் ஆரம்பகட்ட விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

காணாமல் போன மாணவிகள் தொடர்பில் ஏதேனும் தகவல் கிடைத்தால், பலாங்கொடை பொலிஸ் நிலையத்தை 045 228 7222 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவும், பெற்றோரின் 076 707 0913 / 077 165 8788 என்ற இலக்கங்களின் ஊடாகவும் தொடர்புகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பலாங்கொடை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.







