Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
22வது அரசியலமைப்புத் திருத்தம்; 40க்கும் மேற்பட்ட மனுக்கள் இன்று பரிசீலனை!

22வது அரசியலமைப்புத் திருத்தம்; 40க்கும் மேற்பட்ட மனுக்கள் இன்று பரிசீலனை!

19 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராகவும் ஆதரவாகவும் தாக்கல் செய்யப்பட்டுள்ள 40க்கும் மேற்பட்ட மனுக்கள் இன்று (01) உயர்நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்படவுள்ளன.

பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான ஐவரடங்கிய நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் கடந்த 18ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதற்கு எதிராக மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்த காலக்கெடு நேற்று (31) நிறைவடைந்தது.

குறித்த சட்டமூலம் நீதித்துறையின் சுயாதீனத்திற்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என சில மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும், அரசியலமைப்பை துஷ்பிரயோகம் செய்யும் வகையில் இந்தத் திருத்தம் அமைந்துள்ளதாகவும், சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது என்பதால் அதனை நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, சட்டமூலத்திற்கு ஆதரவான மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

மனுக்களைப் பரிசீலிப்பதற்காக பிரதம நீதியரசரால் நேற்று ஐவரடங்கிய நீதிபதிகள் அமர்வு நியமிக்கப்பட்டது.

இந்த அமர்வில் பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேனவுடன் நீதியரசர்களான அச்சல வெங்கப்புலி, அர்ஜுன ஒபேசேகர, சம்பத் அபேகோன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதன்படி, இன்று காலை 10 மணி முதல் உயர்நீதிமன்றத்தில் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பான மனுக்கள் பரிசீலிக்கப்படவுள்ளன.

Tags: BatticaloaBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நேபாள வெள்ளம்; 4,247 பேர் காணாமல் போயுள்ளதாக அறிவிப்பு – மீட்புப் பணிகள் தீவிரம்!
உலக செய்திகள்

நேபாள வெள்ளம்; 4,247 பேர் காணாமல் போயுள்ளதாக அறிவிப்பு – மீட்புப் பணிகள் தீவிரம்!

September 1, 2026
வெருகலில் அறுவடை செய்த நெல்லை கொள்வனவு செய்ய யாரும் முன்வரவில்லை என விவசாயிகள் கவலை
செய்திகள்

வெருகலில் அறுவடை செய்த நெல்லை கொள்வனவு செய்ய யாரும் முன்வரவில்லை என விவசாயிகள் கவலை

September 1, 2026
இனி மாணவர்களுக்கு டியூசன் வகுப்பு எடுக்க அனுமதிப்பத்திரம் தேவை
செய்திகள்

இனி மாணவர்களுக்கு டியூசன் வகுப்பு எடுக்க அனுமதிப்பத்திரம் தேவை

September 1, 2026
இந்தியாவின் தனியார் நிறுவனத்திற்கு வடமராட்சி கிழக்கில் எதிர்ப்பு
செய்திகள்

இந்தியாவின் தனியார் நிறுவனத்திற்கு வடமராட்சி கிழக்கில் எதிர்ப்பு

September 1, 2026
2027ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி உரிமம் புதுப்பிப்பு நாளை ஆரம்பம்!
செய்திகள்

2027ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி உரிமம் புதுப்பிப்பு நாளை ஆரம்பம்!

August 31, 2026
மட்டக்களப்பில் இந்திய இராணுவத்தின் உதவியுடன் பழுகாமம் பாலம் புனரமைப்பு பணி ஆரம்பம்!
செய்திகள்

மட்டக்களப்பில் இந்திய இராணுவத்தின் உதவியுடன் பழுகாமம் பாலம் புனரமைப்பு பணி ஆரம்பம்!

August 31, 2026
Next Post
நேபாள வெள்ளம்; 4,247 பேர் காணாமல் போயுள்ளதாக அறிவிப்பு – மீட்புப் பணிகள் தீவிரம்!

நேபாள வெள்ளம்; 4,247 பேர் காணாமல் போயுள்ளதாக அறிவிப்பு – மீட்புப் பணிகள் தீவிரம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.