லுணுகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிவுலேகம பகுதியில் சட்டவிரோதமாக கட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததாகக் கூறப்படும் 60 வயதுடைய நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பத்தனிக்குப்புற, லுணுகலை பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், அவரது வீட்டில் விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது வீட்டிலிருந்து கட்டுத் துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லுணுகலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் சந்தேகநபரை பசறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.







