பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (04) இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.
இன்று முற்பகல் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு நாமல் ராஜபக்ஷவுக்கு எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய, அவர் இன்று முற்பகல் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
இந்த முன்னிலைக்கான காரணம் தொடர்பில் மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.







