முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளரும், புதிய மக்கள் முன்னணியின் தலைவருமான சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் 23ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் இன்று (09) உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபருக்கு பிணை வழங்குவதற்கான விசேட காரணங்கள் எதுவும் முன்வைக்கப்படாததை கருத்திற்கொண்டு நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதவான், கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.







