அடுத்த காலாண்டில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான கோரிக்கையை முன்வைக்க எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை என வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
இன்று (11) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்பார்த்ததை விட அதிகளவு மழைவீழ்ச்சி கிடைத்துள்ளதால், நீர்மின் உற்பத்திக்கான செலவை ஓரளவுக்குக் கட்டுப்படுத்த முடிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக அடுத்த காலாண்டில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்படாது என தெரிவித்த அமைச்சர், கட்டண அதிகரிப்புக்கான கோரிக்கையை முன்வைக்க எந்த வகையிலும் எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்வரும் ஆண்டின் முதல் மூன்று மாதங்களிலும் தடையின்றி மின்சாரத்தை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.








