கொழும்பு, களுத்துறை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) இன்று (15) காலை 10.00 மணிக்கு இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இது நாளை (16) காலை 10.00 மணி வரை 24 மணித்தியாலங்களுக்கு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் சீதாவக்க பிரதேச செயலகப் பிரிவும் அதனைச் சூழவுள்ள பகுதிகளும் எச்சரிக்கை வலயத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
களுத்துறை மாவட்டத்தில் தொடங்கொட, புளத்சிங்ஹல, பேருவளை, இங்கிரிய, மத்துகம, பாலிந்தநுவர மற்றும் வலல்லாவிட்ட ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் அவற்றைச் சூழவுள்ள பகுதிகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, கேகாலை மாவட்டத்தில் வரகாப்பொல மற்றும் ருவன்வெல்ல பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அவற்றைச் சூழவுள்ள பகுதிகளுக்கும் இந்த எச்சரிக்கை பொருந்தும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.








