Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மின் கட்டண பட்டியல் குறித்த முடிவு!

மின் கட்டணத்தை செலுத்துவதற்கு ‘பக்கேஜ்’ அறிமுகப்படுத்த முன்மொழிவு!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்குத் தேவையான முன்மொழிவுகள் வலுசக்தி மற்றும் போக்குவரத்து பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் தயாரிக்கப்பட்டிருப்பதாக அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் நாளக பண்டார கோட்டேகொட தெரிவித்தார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதற்கமைய குறித்த முன்மொழிவுகளை இந்த வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அவர், மின்சார அலகொன்றின் கட்டணம் அதிகரித்திருப்பதால் பொதுவான மின்சாரப் பாவனையாளர்கள், மற்றும் கைத்தொழில்துறையினர், ஏற்றுமதியாளர்கள் உள்ளிட்ட பலர் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இதன்படி, 2023 ஒக்டோபர் மாதம் 18 வீதத்தால் அதிகரிக்கப்பட்ட மின்சாரக் கட்டணத்தை மீண்டும் 100% வீதத்தால் நீக்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதிக மழையினால் இலங்கை மின்சார சபை அதிக இலாபம் ஈட்டி வருவதாகவும், அந்த இலாபத்தின் பலனை மின்சார பாவனையாளர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் முன்மொழியப்பட்டுள்ளது.

அத்துடன், கூரையில் பொருத்தப்படும் சூரியப்படலங்கள் ஊடாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தேசிய கட்டமைப்புக்குள் இணைத்துக்கொள்ள சூரியப்படலங்களின் இறக்குமதியின் போது வரி விலக்கு அளிக்குமாறும் முன்மொழியப்பட்டிருப்பதாக குழுவின் தலைவர் தெரிவித்தார்.

மேலும் ஆண்டுக்கு இருமுறை மட்டுமே மின் கட்டணத்தை திருத்தம் செய்யவும், மின் கட்டணத்தைச் செலுத்தும்போது பொதிமுறையை (பக்கேஜ்) அறிமுகப்படுத்தவும் முன்மொழியப்பட்டுள்ளது.

மேலும், புதிய மின்சாரச் சட்டம் குறித்து குழுவில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாட எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்
செய்திகள்

முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்

September 14, 2026
கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!
செய்திகள்

கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!

September 14, 2026
சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!
செய்திகள்

சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!

September 14, 2026
வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது
செய்திகள்

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது

September 14, 2026
மன்னார் கடற்பரப்பில் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன்!
செய்திகள்

மன்னார் கடற்பரப்பில் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன்!

September 14, 2026
நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!

September 14, 2026
Next Post
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட முச்சக்கரவண்டி; மரத்தில் சிக்கி சாரதி மரணம்!

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட முச்சக்கரவண்டி; மரத்தில் சிக்கி சாரதி மரணம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.