Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!

கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!

52 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு மேலதிகமாக, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் ஊடாக விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு செய்வதற்காக கிளிநொச்சி மாவட்டத்திற்கு முதற்கட்டமாக 25 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நெல் கொள்வனவுக்கு விண்ணப்பித்துள்ள அரிசி ஆலை உரிமையாளர்களுக்கான காசோலை வழங்கும் நிகழ்வும், அவர்களுடனான கலந்துரையாடலும் இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் மாவட்ட விவசாயப் பணிப்பாளர், கமநல சேவை நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கமக்காரர் அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விவசாயிகளிடமிருந்து சிறுபோக நெல்லை கொள்வனவு செய்வதற்காக மாவட்டம் தோறும் தனியார் மற்றும் பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களுடன் இணைந்த அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை 10 அரிசி ஆலை உரிமையாளர்கள் நெல் கொள்வனவில் ஈடுபடுவதற்கு விண்ணப்பித்துள்ள நிலையில், முதற்கட்டமாக 4 பேருக்கான கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன. எஞ்சிய 6 பேருக்கான கொடுப்பனவுகளும் விரைவில் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கிளிநொச்சியில் நெல் கொள்வனவு நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

நெல்லை விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அரிசி ஆலையில் முதலில் நெல் மாதிரியை சமர்ப்பித்து அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும். பின்னர், கமநல சேவை நிலையத்தில் ARPA / APC ஊடாக தங்களது பெயரைப் பதிவு செய்து நெல் கொள்வனவுக்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ள முடியும்.

எனவே, விவசாயிகள் தங்களுக்கு அருகிலுள்ள அல்லது தங்கள் பகுதிக்கு ஒதுக்கப்பட்டுள்ள அரிசி ஆலைகளை விரைவாக அடையாளம் கண்டு, நெல் மாதிரிகளைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்திலும் 13 அரிசி ஆலை உரிமையாளர்கள் நெல் கொள்வனவில் ஈடுபடுவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

குறித்த அரிசி ஆலை உரிமையாளர்கள் எந்தெந்த பகுதிகளில் நெல் கொள்வனவு செய்ய முடியும் என்பது தொடர்பான ஒதுக்கீடுகள் விரைவில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்
செய்திகள்

முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்

September 14, 2026
சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!
செய்திகள்

சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!

September 14, 2026
வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது
செய்திகள்

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது

September 14, 2026
மன்னார் கடற்பரப்பில் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன்!
செய்திகள்

மன்னார் கடற்பரப்பில் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன்!

September 14, 2026
நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!

September 14, 2026
லேபிள் இல்லாத தடுப்பூசிகள்; சீனாவுக்கே திருப்பி அனுப்பியதாக அமைச்சர் தெரிவிப்பு!
செய்திகள்

லேபிள் இல்லாத தடுப்பூசிகள்; சீனாவுக்கே திருப்பி அனுப்பியதாக அமைச்சர் தெரிவிப்பு!

September 14, 2026
Next Post
முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்

முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.