Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாட்டைக் கட்டியெழுப்ப கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டும்; வர்த்தக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்!

நாட்டைக் கட்டியெழுப்ப கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டும்; வர்த்தக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நாடு கண்ட பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள்வதற்கு இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும், இதற்கான திட்டங்களை ஜனாதிபதி வகுத்துள்ளதாகவும் வர்த்தக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்தார்.

தற்போது நாட்டை மீட்டெடுக்க அரசாங்கம் முன்னெடுத்துள்ள இந்த வேலைத் திட்டங்களுக்கு ஆளும், எதிர்கட்சி என்ற பாகுபாடு இன்றி, அனைவரும் கரம்கோர்த்து செயற்படவேண்டும் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

பிரச்சினைகளை வைத்து, அரசியல் செய்வதென்பது இலகுவான விடயம் என்றும் அந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதே கடினமான விடயம் என்றும் பிரச்சினைகளுக்கு தீர்வுகைளைப் பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டங்களையே அரசாங்கம் தற்போது முன்னெடுத்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (10) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே வர்த்தக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்தால் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து தற்போது நாம் ஓரளவு மீள் எழுந்து வருகின்றோம். என்றாலும் அது முழுமை பெறவில்லை. அது முழுமை பெற வேண்டுமாயின் நாம் இன்னும் கடுமையாக செயற்பட வேண்டும். அதற்காக ஜனாதிபதி பல திட்டங்களை வகுத்திருக்கின்றார். அரசாங்கம் என்ற வகையில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

எவ்வாறாயினும் மக்களின் வாழ்க்கைச் சுமை குறைக்கப்பட வேண்டும். ஒரு மரத்தை ஒரே நாளில் வெட்ட முடியும். ஆனால் அந்த மரத்தை உருவாக்க பல வருடங்கள் தேவைப்படும். அதேபோன்று தான் இந்த நாடு பொருளாதார ரீதியில் பாரிய வீழ்ச்சியைக் கண்டது. எனவே அதனை மீட்டெடுக்க காலம் தேவைப்படுகின்றது. ஒரே நாளில் ஒரு மரத்தை நட்டு ஒரே நாளில் அதன் பலனைப் பெற முடியாது. ஏதோ ஒரு வகையில் கடந்த 74 வருடங்களாக இந்த நாட்டை மாறி மாறி ஆட்சி செய்த அரசாங்கங்கள் விட்ட பிழைகள் மற்றும் தூர நோக்கற்ற சிந்தனை உண்மையில் இந்த நாடு மிகப் பெரிய பொருளாதார வீழ்ச்சிக்குள் சென்றது.

ஆகவே இந்த நேரத்திலே ஆளுங்கட்சி, எதிர்கட்சி என்ற பாகுபாடுகளை ஒரு பக்கம் வைத்து விட்டு மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதி என்ற வகையில் இந்த நாட்டு மக்களுக்கான சேவையை, குறிப்பாக வாழ்க்கைச் சுமையைக் குறைக்கக்கூடிய விடயங்களை முன்னெடுக்கவும் நாட்டை மீட்டெடுக்கவும் நாங்கள் அனைவரும் கரம்கோர்த்து செயற்படவேண்டும். அதற்கான காத்திரபூர்வமான நடவடிக்கைகளை அரசாங்கம் செயற்படுத்திக்கொண்டு வருகின்றது. அவ்வாறான நடவடிக்கைகள் எதிர்வரும் ஆறு மாத காலத்திற்குள் இன்னும் அதிகமாக முன்னெடுக்கப்படும் என்பதை நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என்று வர்த்தக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் மேலும் தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்!
செய்திகள்

‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்!

June 27, 2026
நீதிமன்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட பாரியளவு போதைப்பொருட்கள் அழிப்பு!
செய்திகள்

நீதிமன்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட பாரியளவு போதைப்பொருட்கள் அழிப்பு!

June 27, 2026
நீதிபதிகளின் ஓய்வு வயது நீட்டிப்புக்கு சர்வதேச சட்ட அமைப்பு எதிர்ப்பு!
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வு வயது நீட்டிப்புக்கு சர்வதேச சட்ட அமைப்பு எதிர்ப்பு!

June 27, 2026
‘சடலத்தை வைத்தியசாலை அருகே போட்டுவிடுங்கள்’; பெண் உடலியல் சிகிச்சை நிபுணர் கொலை வழக்கில் அதிர்ச்சி தகவல்கள்!
செய்திகள்

‘சடலத்தை வைத்தியசாலை அருகே போட்டுவிடுங்கள்’; பெண் உடலியல் சிகிச்சை நிபுணர் கொலை வழக்கில் அதிர்ச்சி தகவல்கள்!

June 27, 2026
பிரபல இயக்குனரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!
செய்திகள்

பிரபல இயக்குனரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!

June 27, 2026
வெனிசுலாவில் மீண்டும் நிலநடுக்கம்; உயிரிழப்பு 920 ஆக உயர்வு!
செய்திகள்

வெனிசுலாவில் மீண்டும் நிலநடுக்கம்; உயிரிழப்பு 920 ஆக உயர்வு!

June 27, 2026
Next Post
மட்டு காத்தான்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்!

மட்டு காத்தான்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.