Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்கள்!

அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்கள்!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

வவுனியா வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களினால் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈழத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்தவும், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு பரிந்துரைக்கவும் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையிலேயே, வவுனியா வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் இதனை தெரிவித்துள்ளது.

மேலும், “அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல்வாதிகள் பொறுப்புக்கூறல் மற்றும் உண்மைக்கான அவர்களின் முயற்சியில் எங்கள் போராட்டத்தை அங்கீகரித்தமைக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.” என அவர்கள் கூறியுள்ளனர்.

கடந்த மாதம் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களால் ‘ஈழத் தமிழர்கள் ஜனநாயக ரீதியாகவும் சமத்துவமாகவும் பிரதிநிதித்துவப்படுத்தப்பட வேண்டும்’ மற்றும் ‘நீடித்த அமைதியான அரசியல் தீர்வுக்கு பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்’ எனப்படும் தீர்மானங்களை அறிமுகப்படுத்தினர்.

ஆயுதப் போரின் இறுதி வாரங்களில் முள்ளிவாய்க்காலில் தமிழர் படுகொலை இடம்பெற்று 15 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தநிலையில், ஆயுதப் போரின் முடிவில் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த தமது உறவினர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதைத் தெரிவிக்கக் கோரி, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தமிழ்க் குடும்பங்கள் 2017ஆம் ஆண்டு முதல் வடக்கு – கிழக்கு முழுவதும் தொடர்ச்சியாகப் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

சுமார் 2611 நாட்களாக இந்த குடும்பங்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றபோதிலும், இலங்கையில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள், அவர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு எட்டாதிருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

தொடர்புடையசெய்திகள்

இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்
செய்திகள்

இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்

June 13, 2026
சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!
செய்திகள்

சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!

June 13, 2026
எரிபொருளுக்கான அரச மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு!
செய்திகள்

எரிபொருளுக்கான அரச மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு!

June 13, 2026
பண்டாரநாயக்க விமான நிலைய இரண்டாம் முனைய கட்டுமானம் நவம்பரில் மீண்டும் ஆரம்பிக்கத் திட்டம்
செய்திகள்

பண்டாரநாயக்க விமான நிலைய இரண்டாம் முனைய கட்டுமானம் நவம்பரில் மீண்டும் ஆரம்பிக்கத் திட்டம்

June 13, 2026
மாதம்பேவில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 65 வயது வர்த்தகர் கைது
செய்திகள்

மாதம்பேவில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 65 வயது வர்த்தகர் கைது

June 13, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சுரேஷ் சலே குறித்து சரத் ​​பொன்சேகா கடும் குற்றச்சாட்டு!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சுரேஷ் சலே குறித்து சரத் ​​பொன்சேகா கடும் குற்றச்சாட்டு!

June 13, 2026
Next Post
வரலாற்றில் இடம்பிடித்துள்ள நேற்றைய ஐ.பி.எல் போட்டி!

வரலாற்றில் இடம்பிடித்துள்ள நேற்றைய ஐ.பி.எல் போட்டி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.