Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாட்டை விட்டு வெளியேற தயாராகும் 5000 வைத்தியர்கள்!

நாட்டை விட்டு வெளியேற தயாராகும் 5000 வைத்தியர்கள்!

11 months ago
in செய்திகள்

இலங்கையிலுள்ள அரச வைத்தியசாலைகளில் கடமையாற்றும் 5000 வைத்தியர்கள் வெளிநாடுகளில் மருத்துவம் செய்வதற்குத் தேவையான பரீட்சைகளில் சித்தியடைந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சுக்கு இது பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்க வைத்தியசாலைகளில் தற்போது 20,000 வைத்தியர்கள் பணிபுரிவதாகவும், அவர்களில் 5,000 பேர் வெளிநாடுகளுக்குச் சென்றால், சுகாதார அமைச்சுக்கு பெரும் சவாலை எதிர்கொள்ள நேரிடும் எனவும் குறிப்பிடப்படுகிறது.

ஐக்கிய இராச்சியத்தில் மருத்துவப் பயிற்சி பெறுவதற்குத் தகுதி பெற வேண்டிய 3500 பரீட்சார்த்திகளில் 750 பேர் இலங்கையர்கள் எனவும் அவர்களில் 550 பேர் பரீட்சையில் சித்தியடைந்துள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன, இப்பிரச்சினையை எதிர்கொள்வதற்கு மேலும் மேலும் பயிற்சி வைத்தியர்களை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் விசேட வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது கட்டுப்படுத்த முடியாத விடயம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வைத்தியர்கள் வெளிநாடு செல்வதை தடுக்கும் வகையில் சம்பள முறையை திருத்தியமைத்து அவர்களுக்கு நிதி கொடுப்பனவுகளை வழங்குமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க அரசாங்கத்திடம் யோசனை முன்வைத்துள்ளார்.

ஆனால் அந்த பரிந்துரை மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. அதற்கு பதிலளித்த பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன, “இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வரும் இவ்வேளையில் வைத்தியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதும் அவர்களுக்கு நிதி கொடுப்பனவுகளை வழங்குவதும் கடினமான விடயமாகும்.

எவ்வாறாயினும், இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு சுகாதார அமைச்சு அதிகபட்ச முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.

தொடர்புடையசெய்திகள்

பஸ்ஸில் போதைப்பொருளை பாவித்துவிட்டு பெண்ணிடம் பாலியல் சீண்டல்; தட்டி கேட்ட நடத்துனர் மீதும் தாக்குதல்
செய்திகள்

பஸ்ஸில் போதைப்பொருளை பாவித்துவிட்டு பெண்ணிடம் பாலியல் சீண்டல்; தட்டி கேட்ட நடத்துனர் மீதும் தாக்குதல்

June 9, 2025
பஸ் ஒன்று முன்னால் சென்ற பஸ்ஸை முந்திச் செல்ல முற்பட்ட போது எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து
செய்திகள்

பஸ் ஒன்று முன்னால் சென்ற பஸ்ஸை முந்திச் செல்ல முற்பட்ட போது எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து

June 9, 2025
சாவகச்சேரியில் பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்தவரைக் கைது செய்த பொலிஸார்
செய்திகள்

சாவகச்சேரியில் பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்தவரைக் கைது செய்த பொலிஸார்

June 9, 2025
700 மில்லியன் வரி ஏய்ப்பு ; முன்னாள் இராஜாங்க அமைச்சரின் மனைவி கைது
செய்திகள்

700 மில்லியன் வரி ஏய்ப்பு ; முன்னாள் இராஜாங்க அமைச்சரின் மனைவி கைது

June 9, 2025
சூடுபிடிக்கும் கைதிகளை விடுவித்த விவகாரம்; சிறைச்சாலைகள் ஆணையாளரை பணி இடைநீக்கம் செய்ய தீர்மானம்
செய்திகள்

சூடுபிடிக்கும் கைதிகளை விடுவித்த விவகாரம்; சிறைச்சாலைகள் ஆணையாளரை பணி இடைநீக்கம் செய்ய தீர்மானம்

June 9, 2025
சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களின் விபரங்களை வெளியிட்டார் கம்மன்பில
செய்திகள்

சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களின் விபரங்களை வெளியிட்டார் கம்மன்பில

June 9, 2025
Next Post
வெவல்தெனிய பிரதேசத்தில் பஸ் விபத்து; 15 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

வெவல்தெனிய பிரதேசத்தில் பஸ் விபத்து; 15 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.