கொழும்பு – கண்டி பிரதான வீதியில் வெவல்தெனிய பிரதேசத்தில் இன்று (01) திங்கட்கிழமை இடம்பெற்ற பஸ் விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸும் தனியார் பஸ்ஸும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் வத்துப்பிட்டிவல மற்றும் வறக்காப்பொல வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.