Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு ஆயராக அன்டன் ரஞ்சித் ஆண்டகை தமது பணியினை பெறுப்பேற்றுக்கொண்டார்!

மட்டு ஆயராக அன்டன் ரஞ்சித் ஆண்டகை தமது பணியினை பெறுப்பேற்றுக்கொண்டார்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் புதிய அப்போஸ்தலிக்க பரிபாலகராக கலாநிதி அன்டன் ரஞ்சித் ஆண்டகை நேற்று (02) மாலை உத்தியோகபூர்வமாக தமது சேவையினை பொறுப்பேற்றுக்கொண்டார்.

கடந்த 16 வருடங்களாக குருவாக, உதவி ஆயராக, ஆயராக மட்டக்களப்பு மறைமாவட்டத்தில் கடமையாற்றிவிட்டு, தனது ஓய்வினை கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை திருத்தந்தையிடம் அறிவித்ததை தொடர்ந்து, மட்டக்களப்பு மறைமாவட்டத்தினை பரிபாலிப்பதற்காக திருத்தந்தையினால் கொழும்பு மறைமாவட்டத்தின் துணை ஆயர் கலாநிதி அன்டன் ரஞ்சித் ஆண்டகை மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க பரிபாலகராக கடந்த ஆகஸ்ட் 19ஆம் திகதி நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் கலாநிதி அன்டன் ரஞ்சித் ஆண்டகை மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் புதிய அப்போஸ்தலிக்க பரிபாலகராக தமது சேவையினை உத்தியோகபூர்வமாக இன்று ஆரம்பித்துள்ளார்.

இதன்போது கலாநிதி அன்டன் ரஞ்சித் ஆண்டகை மட்டக்களப்பு ஆயர் இல்லத்திலிருந்து ஓய்வு நிலை ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில் வரவேற்கப்பட்டார்.

அதனை தொடர்ந்து, மேலைத்தேய வாத்திய அணிவகுப்புடன் புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு தொடர்ந்து மரியாள் பேராலயத்தில் பதவியேற்பினை முன்னிட்டு விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மறைமாவட்ட குரு முதல்வர் ஜோச் ஜீவராஜ் அடிகளார், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஐஸ்டினா முரளிதரன், கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம், 243வது படைப்பிரிவின் கட்டளை தளபதி பிரிக்கேட் கொமாண்டர் சந்திம குமாரசிங்க, மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சனி ஸ்ரீகாந்த், விமானப்படை உயரதிகாரிகள் உட்பட சர்வ மத தலைவர்கள் பெருமளவினர் கலந்துகொண்டனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

இரத்தப் பரிசோதனைக்கு அதிக கட்டணம் அறவிட்ட தனியார் நிறுவனத்திற்கு ரூ.30 இலட்சம் அபராதம்!
செய்திகள்

இரத்தப் பரிசோதனைக்கு அதிக கட்டணம் அறவிட்ட தனியார் நிறுவனத்திற்கு ரூ.30 இலட்சம் அபராதம்!

July 23, 2026
மட்டக்களப்பு, அம்பாறையில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம்
செய்திகள்

மட்டக்களப்பு, அம்பாறையில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம்

July 23, 2026
கனடாவில் இலங்கை வம்சாவளி மருத்துவர் கைது ; குழந்தைகள் தொடர்பான பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்க வழக்கு பரபரப்பு
உலக செய்திகள்

கனடாவில் இலங்கை வம்சாவளி மருத்துவர் கைது ; குழந்தைகள் தொடர்பான பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்க வழக்கு பரபரப்பு

July 23, 2026
இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்த இந்திய மீனவர்கள் கைது
செய்திகள்

இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்த இந்திய மீனவர்கள் கைது

July 23, 2026
மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது
செய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது

July 22, 2026
கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்
செய்திகள்

கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

July 22, 2026
Next Post
ரணிலின் 1500 ஆதரவாளர்களுக்கு வழங்கப்படவிருந்த பிரியாணி சாப்பாடு பறிமுதல்!

ரணிலின் 1500 ஆதரவாளர்களுக்கு வழங்கப்படவிருந்த பிரியாணி சாப்பாடு பறிமுதல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.