Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நான் விடுதலைப் புலிகளிலிருந்து யுத்தம் செய்தவன்; கூட்டத்தில் பேசிய பிள்ளையான்!

நான் விடுதலைப் புலிகளிலிருந்து யுத்தம் செய்தவன்; கூட்டத்தில் பேசிய பிள்ளையான்!

2 years ago
in செய்திகள்

‘தமிழ் மக்களுடைய காணிகளைச் சிங்களவர்கள் அபகரித்ததாலேயே நான் விடுதலைப் புலிகளில் இருந்து யுத்தம் செய்தேன்’ என மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்துள்ளார்.

மேலும், மகாவலி திட்டப் பகுதியில் மண் அகழ்வு மற்றும் சில விடயங்களை நிறுத்துமாறு மகாவலி அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தலைமையில் மகாவலி மற்றும் மேச்சல்தரை தொடர்பான விசேட கூட்டம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்றைய தினம் (26.06.2023) இடம்பெற்றுள்ளது.

இதன்போது இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, இன்று நாட்டின் நிலைமை என்ன? பொருளாதார நிலை என்ன? வெளிநாட்டு மக்கள் நிலை எவ்வாறு? என்ற விடயங்களைக் கதைக்க வேண்டும் அரசியலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு பக்கமாகக் கருத்து தெரிவிக்கின்றனர்.

நான் புலிகளில் இயக்கத்தில் இருந்து வந்தவன். எங்களுடைய காணிகளைச் சிங்களவர்கள் அபகரித்ததால் யுத்தம் செய்தோம். இது நான் முதல் இருந்த நிலை. அதை வைத்து இப்போது கதைக்க முடியாது பிரயோசனமில்லை. அதனால் தான் நான் அரசியலுக்கு வந்தேன்.

எங்கள் மக்களை ஒரு பக்கம் சமப்படுத்தவும் மறுபக்கம் அரசாங்கத்தைச் சமப்படுத்தவும் வேண்டும். அதற்காக இரு பக்கமும் ஒன்றிணைந்து விசேடமாக ஜனாதிபதியுடன் கதைத்துப் பேசி நாட்டின் சட்டங்களை மாற்ற வேண்டும். அதனை மாற்றுவதற்கு வேலை செய்யவேண்டும் இல்லாவிடில் வேலையில்லை.

நாட்டின் நிர்வாக முறை மாற்ற வேண்டும் என அரகலயினர் ஆர்ப்பாட்டம் செய்தனர் மகாவலி மாறியதா? ஆசிரியர்கள் மாறினார்களா? அரசியல்வாதிகள் மாறினார்களா ? பிரத்தியேக வகுப்பு ஆசிரியர் மாறினார்களா? வேலை இல்லையே? இவ்வாறு எதுவுமே மாற்றாமல் எல்லாத்தையும் சமனாக்கு என்றால் எப்படி சமனாகும்.

எனவே, மாவட்ட நிர்வாக அதிகாரிகள், அரசியல் நிர்வாக அதிகாரிகள் கலந்துரையாடி எதிர்கால திட்டம், நாங்கள் என்ன செய்ய வேண்டும், நீங்கள் என்ன செய்வீர்கள் என்பதை யோசியுங்கள்.

இந்த மகாவலி திட்டப் பகுதியில் மண் அகழ்கின்றனர் இதை யார் அகழ்கின்றார்கள்? இவ்வாறான சில விடயங்களை நிறுத்துமாறு உங்கள் அமைச்சருக்கு உங்கள் பணிப்பாளரிடம் தெரிவியுங்கள் என அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்தின், நாடாளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரன் மகாவலி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள். கமலநல அதிகாரிகள், விவசாயிகள் கால்நடை பண்ணையாளர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

உப்பு பயன்பாடு தொடர்பில் பொதுமக்கள் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும்; சுகாதார அமைச்சகம்
செய்திகள்

உப்பு பயன்பாடு தொடர்பில் பொதுமக்கள் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும்; சுகாதார அமைச்சகம்

June 5, 2025
“இவர்கள் உண்மையாகவே மனிதர்களா? ஏன் இந்த கொலைவெறி இவர்களுக்கு”; நிஸாம் காரியப்பர்
அரசியல்

“இவர்கள் உண்மையாகவே மனிதர்களா? ஏன் இந்த கொலைவெறி இவர்களுக்கு”; நிஸாம் காரியப்பர்

June 5, 2025
பல்கலை பகிடிவதைகளுக்கு எதிராக செயலணி ஒன்றை அமைக்க நடவடிக்கை; பிரதமர் ஹரிணி
செய்திகள்

பல்கலை பகிடிவதைகளுக்கு எதிராக செயலணி ஒன்றை அமைக்க நடவடிக்கை; பிரதமர் ஹரிணி

June 5, 2025
தேசிய இடமாற்ற கொள்கையை நடைமுறைப்படுத்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் சங்கம்
செய்திகள்

தேசிய இடமாற்ற கொள்கையை நடைமுறைப்படுத்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் சங்கம்

June 5, 2025
நாட்டில் முகக்கவசங்களுக்கு பற்றாக்குறை
செய்திகள்

நாட்டில் முகக்கவசங்களுக்கு பற்றாக்குறை

June 5, 2025
செம்மணியில் இதுவரை குழந்தை உட்பட 13 என்புத்தொகுதிகள் மீட்பு
செய்திகள்

செம்மணியில் இதுவரை குழந்தை உட்பட 13 என்புத்தொகுதிகள் மீட்பு

June 5, 2025
Next Post
உலக ஆவணப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது மகாவம்சம்!

உலக ஆவணப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது மகாவம்சம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.