Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அரியநேந்திரனுடன் சேர்ந்து செயற்படும் ஒட்டுக்குழுக்கள்; சஜித்தை வெற்றிபெறச் செய்யுமாறு சந்திரகுமார் கோரிக்கை!

அரியநேந்திரனுடன் சேர்ந்து செயற்படும் ஒட்டுக்குழுக்கள்; சஜித்தை வெற்றிபெறச் செய்யுமாறு சந்திரகுமார் கோரிக்கை!

8 months ago
in அரசியல், செய்திகள், மட்டு செய்திகள்

தமிழர்களின் ஏக பிரதிநிதியான தமிழரசுகட்சியே சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு தெரிவித்து அவருக்கு வாக்களித்தால் தமிழ் மக்களுக்கு தீர்வு ஒன்று கிடைக்கும் என அந்த கட்சியே ஏகமனதாக தீர்மானித்துள்ளது.

அந்த நிலையில் விடுதலைப் புலிகளின் போராட்டத்தை சிதைத்தது போன்று, தமிழரசு கட்சியை சிதைப்பதற்காக ஆயுதம் தாங்கி போராடி இராணுவத்துடன் சோர்ந்து தமிழ் மக்களை காட்டிக் கொடுத்த ஒட்டுக்குழுக்கள் எல்லோரும் சேர்ந்த குழுவே இந்த தமிழ் பொது வேட்பாளர். எனவே மக்கள் தமிழரசு கட்சி ஆதரிக்கும் சஜித் பிரேமதாஸாவை வெற்றிபெறச் செய்வார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டு மாவட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு திருமலை வீதி தாண்டவன்வெளி பிரதேச்திலுள்ள மக்கள் சக்தி கூட்டணியின் மாவட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமாரின் காரியாலயத்தில் புதன்கிழமை (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஆயுதம் தாங்கி போராடி இராணுவத்துடன் சேர்ந்து தமிழ் மக்களை காட்டிக் கொடுத்த ஒட்டுக்குழுக்கள் எல்லோரும் இந்த தமிழ் பொது வேட்பாளருடன் சேர்ந்திருக்கின்றனர். எனவே ஒட்டுக் குழுக்கள் தான் பொது வேட்பாளர். எனவே ஆளும் கட்சி என்பது ஜனநாயக கட்சி. அது தேசிய கட்சி நாட்டில் எல்லா பாகங்களிலும் கிளையுண்டு அது புரோக்கர் இல்லாமல் மக்களுக்கு நேரடியாக சேவை செய்வதற்கு இயங்குகின்றது.

இந்த பொது வேட்பாளரில் யார் யார் இருக்கின்றனர் நா.உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன் ஜனாதிபதியின் நெருங்கிய நண்பன், அவ்வாறே மட்டக்களப்பில் ரேலோ கட்சியின் நா.உறுப்பினர் கோ.கருணாகரன், வெளிப்படையாக மக்களிடம் ரணிலுக்கு வாக்களிக்குமாறு தெரிவித்துவருகின்றார். எனவே இவர்கள் அனைவரும் தேர்தலில் ஒரு கைகூலியாக செயற்படுகின்றனர். என புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும் இங்குள்ள தமிழர்களுக்கும் நன்கு தெரியும்.

அதேவேளை இந்த மாவட்டத்தில் இரத்தம் சிந்தி காக்கப்பட்ட மண் அந்த மண்ணை கபளீகரம் செய்து கொண்டுசென்று வெளிமாவட்டங்களில் விற்பவர்கள் நல்லாக இருந்ததாக சரித்திரம் இல்லை. அவ்வாறே மாவட்டத்தில் அரச காணிகளில் நிறைய மோசடிகள் இடம்பெற்றுள்ளதுடன் சில அரசியல்கட்சிகள் தங்களுக்கு ஏற்றால் போல வருமானத்தை செய்து சகலதையும் சூறையாடியுள்ளனர்.

எனவே எமது தலைவர் சஜித் ஆட்சிக்கு வந்ததும் இந்த ஊழல் மோசடிக்கு எதிராக ஒரு ஆணைக்குழு அமைத்து விசாரணை செய்து ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்படும். அதேவேளை எதிர்வரும் காலங்களில் இந்த மோசடி கும்பல்களுக்கு மக்கள் தகுந்த பாடம் படிப்பிப்பார்கள்.

எங்களுக்கு எதிராக சில கட்சிகள் பொய்யான பிரச்சாரங்களை செய்துவருகின்றனர். எனவே நாங்கள் கிராமம் கிராமாக, வீடு வீடாக சென்று விளக்கமளித்து வருகின்றோம். 90 வீதமான மக்கள் சஜித் தமது இதயத்தில் இருப்பதாகவும், அவருக்கு வாக்களிக்கவுள்ளதாக தெரிவித்தனர். இருந்தபோதும் மக்கள் எதிர்பார்கின்ற மாற்றம் ஒன்று நடக்கும். நிச்சயம் வெற்றி உறுதியாகிவிட்டது. இலஞ்சம் ஊழல் அற்ற அரசாங்கத்தை நிறுவுவதற்கு மக்கள் தயாராகியுள்ளனர்.

எனவே கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்றுவரும் இலஞ்ச ஊழல், கொலைகளுக்கு நீதி கிடைக்காமல் வீதியில் இறங்கி போராடினார்கள். அதற்கான சந்தர்ப்பம் ஜனநாயக முறையில் கிடைத்துள்ளது. அதனை சரியாக பயன்படுத்தி சஜித் பிரேமதாஸவின் டெலிபோன் சின்னத்துக்கு முன்னால் புள்ளடி இடுங்கள். அப்போது தான் உண்மையான ஜனநாயகம் 22 ம் திகதிக்கு பின்னர் மலரும் என்றார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

போலந்து வெளிவிவகார அமைச்சர் பிரதமருடன் சந்திப்பு
செய்திகள்

போலந்து வெளிவிவகார அமைச்சர் பிரதமருடன் சந்திப்பு

May 31, 2025
வாழைச்சேனை பாரதி பாலர் பாடசாலை சிறுவர் சந்தை நிகழ்வு
செய்திகள்

வாழைச்சேனை பாரதி பாலர் பாடசாலை சிறுவர் சந்தை நிகழ்வு

May 31, 2025
ஆசிய பிராந்தியத்தை அச்சுறுத்தும் கொவிட் தொற்று இலங்கையில் கண்டுபிடிப்பு
செய்திகள்

ஆசிய பிராந்தியத்தை அச்சுறுத்தும் கொவிட் தொற்று இலங்கையில் கண்டுபிடிப்பு

May 31, 2025
ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் செல்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் மீது முறிந்து விழுந்த பாரிய மரம்
செய்திகள்

ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் செல்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் மீது முறிந்து விழுந்த பாரிய மரம்

May 31, 2025
123 இந்திய படகுகள் கடலில் புதைக்கப்படும் என நீரியல்வள அதிகாரி தெரிவிப்பு!
செய்திகள்

123 இந்திய படகுகள் கடலில் புதைக்கப்படும் என நீரியல்வள அதிகாரி தெரிவிப்பு!

May 31, 2025
மட்டக்களப்பு – காத்தான்குடியில் வர்த்தக நிலையத்தில் தீ விபத்து
செய்திகள்

மட்டக்களப்பு – காத்தான்குடியில் வர்த்தக நிலையத்தில் தீ விபத்து

May 31, 2025
Next Post
விசேட தேவையுடையவர்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவிப்பு!

விசேட தேவையுடையவர்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.