Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நள்ளிரவுடன் அனைத்து கட்சி கிளை அலுவலகங்களையும் அகற்றுமாறு அறிவித்தல்!

நள்ளிரவுடன் அனைத்து கட்சி கிளை அலுவலகங்களையும் அகற்றுமாறு அறிவித்தல்!

2 years ago
in அரசியல், செய்திகள், முக்கிய செய்திகள்

இன்று (19) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தொகுதி மட்டத்தில் தற்போதுள்ள அமைக்கப்பட்டுள்ள அனைத்து கட்சிகளின் கிளை அலுவலகங்களையும் அகற்றுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதன்படி, இன்று நள்ளிரவு முதல் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு தலைமை அலுவலகமும், தொகுதிக்கு ஒரு அலுவலகம் மட்டுமே காணப்படவேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தெரிவித்தார்.முன்னதாக அமைக்கப்பட்ட மற்ற அனைத்து அலுவலகங்களையும் அந்தந்த கட்சிகள் அப்புறப்படுத்த வேண்டும் என்றும், அவ்வாறு செய்யாவிட்டால் பொலிஸார் மூலம் அகற்றப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (19) நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை எண்ணும் பணி பிற்பகல் 04.15 மணியளவில் ஆரம்பிக்கப்படும் எனவும், எண்ணப்பட்டதன் பின்னர் முடிவுகளை ஊடகங்களுக்கு வெளியிடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

உத்தியோகபூர்வ முடிவுகள் கிடைக்கும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் தனது வாக்கை வாக்காளர் எவ்வாறு சரியாகக் குறிப்பிடுவது என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

“எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர்கள் தமது வாக்கை எவ்வாறு சரியாக அளிக்க வேண்டும்.

வாக்கினை ‘1’ என்றும் விருப்ப வாக்குகளை ‘2’ மற்றும் ‘3’ என்றும் குறிக்கலாம்.

ஒரு வாக்கை மட்டும் அளிப்பதற்கு, ‘1’ அல்லது ‘X’ எனக் குறிக்கலாம்.

எனினும், ஒரு வாக்கை அளிக்கும் போது ‘1’ மற்றும் ‘X’ என்ற இரண்டையும் குறிக்க வேண்டாம்.

‘X’ அடையாளம் இட்ட பின்னர் வேறு எந்த எண்ணையும் பயன்படுத்த வேண்டாம்.

1 2 3 4 5 6 போன்ற பல இலக்கங்களையும் குறிக்க வேண்டாம். அப்படியென்றால் அவ்வாறான அனைத்து வாக்குகளும் நிராகரிக்கப்படும்.” என்றார்.

Tags: BattinaathamnewselectionpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை
செய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை

September 11, 2026
மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!

September 11, 2026
வாகரையில் கரைவலை படகு விபத்து
செய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து

September 11, 2026
செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!
செய்திகள்

செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!

September 11, 2026
அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!
செய்திகள்

அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!

September 11, 2026
கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!
செய்திகள்

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!

September 11, 2026
Next Post
ஜனாதிபதியே ஊரடங்கு சட்டம் தொடர்பில் அறிவிப்பார்!

ஜனாதிபதியே ஊரடங்கு சட்டம் தொடர்பில் அறிவிப்பார்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.