கொழும்பு, கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு இளைஞர்கள் நேற்று முன்தினம் (20) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்தனர்.
கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் சேதவத்தை மற்றும் கொழும்பு 14 ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 19 மற்றும் 26 வயதுடைய இளைஞர்கள் ஆவார்.
சந்தேக நபர்களில், ஒருவரிடமிருந்து 11 கிராம் 130மில்லி கிராம் 450 ஐஸ் போதைப்பொருளும் மற்றையவரிடமிருந்து 08 கிராம் 110 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.