வாரியபொல, மினுவாங்கொட பகுதியில் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான K8 பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானது.
ரேடார் தொடர்புகளை இழந்த நிலையில் விமானம் விபத்துக்குள்ளானதாக விமான படை தெரிவித்துள்ளது.

K-8 பயிற்சி விமானம் சிறிது நேரத்திற்கு முன்பு வாரியபோலா பகுதியில் விபத்துக்குள்ளானதுடன் முற்றாக எரிந்து நாசமாகி உள்ளது.
விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக விமானப்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட இந்த விமானத்தின் இரண்டு விமானிகளும் பாராசூட்களின் உதவியுடன் விமானத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.