இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர் ந.சஞ்ஜீபன் அவர்கள் ஜனாதிபதியின் உதவிச் செயலாளராக (அபிவிருத்தி நிருவாகம்) நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியின் உதவி செயலாளராக அபிவிருத்தி நிருவாகத்திற்கு பொறுப்பாக பொது சேவை ஆணைக்குழுவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு பிரதேசத்திலிருந்து இவ்வாறான ஒரு பொறுப்புமிக்க உயர் பதவிக்கு இளம் வயதிலே தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இவர் கிழக்கு பல்கலைக்கழகம், மட்/புனித மிக்கேல் கல்லூரி, வந்தாறுமூலை விஷ்ணு வித்தியாலயம், செங்கலடி மத்திய கல்லூரி என்பவற்றின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.