Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

மட்டு பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

இந்த நாட்டில் அதிகளவான பெண்களின் செயற்பாடுகளே நாட்டின் பொருளாதாரத்தினை கட்டியெழுப்பிவருவதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்ரீனா முரளிரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும் அவர்களின் உற்பத்திகளுக்கான சந்தைவாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சின் வழிகாட்டுதலில் ஐக்கிய நாடுகள் பெண்கள் அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக ஜப்பானிய நிதி உதவியில் ஷெரிஷலிஸ் நிறுவகத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு வேலை திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்கீழ் பெண்களுக்கான தொழில் முயற்சியாளர்களுக்கான தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் பெண் முயற்சியாளர்களின் பண்முகத்தன்மை கண்காட்சியும் நேற்று (26) மட்டக்களப்பு கல்லடியில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் பிரணவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்ரீனா முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் ஐக்கிய நாடுகள் சபையின் பெண் அபிவிருத்தி திட்டத்தின் இணைப்பாளர்களான மிக்ஷேல்,மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெட்னம்,கோறளைப்பற்று வடக்கு வாகரை,வாழைச்சேனை பிரதேச செயலாளர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

பெண்களின் பொருளாதாரத்தினை வலுப்படுத்தல் மற்றும் முயற்சியான்மையினை மேம்படுத்தல் திட்டத்தின் முன்னெடுக்கப்பட்டுவந்த பல்வேறு பயிற்சி திட்டங்களை நிறைவுசெய்தவர்களுகான சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், பெண் முயற்சியாளர்களுக்கான தொழில் உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டன.

வாகரை,வாழைச்சேனை,மண்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவுகளில் இந்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் நிலையில், இந்த திட்டங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்டுவரும் உற்பத்திகள் கொண்ட கண்காட்சி கூடங்களும் இதன்போது திறந்துவைக்கப்பட்டன.

நூற்றுக்கணக்கான உற்பத்தியாளர்களின் கண்காட்சி கூடங்களும் இதன்போது திறந்துவைக்கப்பட்டன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அரச வங்கியில் பெருந்தொகை பணம் கொள்ளையிட்ட சம்பவத்தில் உதவி முகாமையாளரின் மோசடிகள் அம்பலம்
செய்திகள்

அரச வங்கியில் பெருந்தொகை பணம் கொள்ளையிட்ட சம்பவத்தில் உதவி முகாமையாளரின் மோசடிகள் அம்பலம்

June 8, 2026
வட மாகாணசபைக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்குவது தேசத்துரோகம்; சரத் வீரசேகர
செய்திகள்

வட மாகாணசபைக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்குவது தேசத்துரோகம்; சரத் வீரசேகர

June 8, 2026
மட்டு வெல்லாவெளியில் உள்ளூர் துப்பாக்கியுடன் ஒருவர் கைது
செய்திகள்

மட்டு வெல்லாவெளியில் உள்ளூர் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

June 8, 2026
செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு

June 7, 2026
கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்
செய்திகள்

கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்

June 7, 2026
சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி
செய்திகள்

சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

June 7, 2026
Next Post
இலங்கையில் 63 வீதமான பாடசாலை மாணவர்களுக்கு போதுமான தூக்கமில்லை

இலங்கையில் 63 வீதமான பாடசாலை மாணவர்களுக்கு போதுமான தூக்கமில்லை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.