திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பயணிகள் பேருந்தின் முன் கதவிலிருந்து தூக்கி வீசப்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் போதிவெல, ரிக்கில்லகஸ்கட பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இளைஞன் ஹபரண – திருகோணமலை வீதியின் ஹபரண பகுதியில் விபத்திற்கு முகம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
விபத்தில் சிக்கிய இளைஞன் ஹபரணை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஹபரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.