சீனாவின் லியோனிங் மாகாணத்தில் சியாங் நகரில் உள்ள உணவகத்தில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று மதியம் 12.25 மணிக்கு ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர் மற்றும் மூன்று பேர் காயமடைந்ததாக சீன அரசு தெரிவித்துள்ளது.

மேலும், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், மீட்புப்பணிகளுக்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.