போலி போலந்து விசாக்களுடன் கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி வெளிநாடு செல்ல முயன்ற இரண்டு சந்தேக நபர்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்கள் போலி போலந்து விசாக்களுடன் கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி கட்டார் வழியாக போலந்துக்கு வெளிநாடு செல்ல முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கட்டுநாயக்க பிரிவு விசாரணையை ஆரம்பித்துள்ளது.

அதன்படி, இச்சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் நேற்று முன்தினம் (30) கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 31 மற்றும் 38 வயதுடைய தெமோதர மற்றும் பெலிகல பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
சந்தேகநபர்கள் இன்று (01) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதுடன் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கட்டுநாயக்கப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.