கோவை வால்பாறையில் வீட்டின் வெளியே நின்ற சிறுமியை சிறுத்தை கவ்வி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,
வால்பாறை அருகே உள்ள பச்சைமலை எஸ்டேட்டில் வடமாநில பெண் தொழிலாளி ஒருவர், தனது வீட்டின் பின்புறம் தனது 6 வயது மகளுடன் தண்ணீர் பிடித்து பின்னர் தண்ணீர் குடத்தை வீட்டிற்குள் வைக்க சென்றார்.

தொடர்ந்து மறுபடியும் தண்ணீர் பிடிக்க வந்தார்.
அப்போது வீட்டின் வெளியே நின்றுகொண்டிருந்த சிறுமியை சிறுத்தை தாக்கி இழுத்துச் சென்றுள்ள துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.








