Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மகிந்தவின் மனைவி பெயரில் போலி கணக்கு தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்

மகிந்தவின் மனைவி பெயரில் போலி கணக்கு தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்

1 year ago
in செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச சிரிலிய சவிய என்ற பெயரில் பராமரித்து வந்த போலி கணக்கு தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது ராஜபக்ச குடும்பத்தின் பல்வேறு நிதி மோசடிகள் தொடர்பான தகவல்களை இதன்போது தெரிவித்துள்ளார்.

சிரிலிய சவிய அமைப்புக்கு சொந்தமான வங்கிக் கணக்குகளின் ஆணை கடிதம் இரகசியமான முறையில் வங்கியில் இருந்து திருடப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஷிரந்தி ராஜபக்ச சிரிலிய சவிய என்ற பெயரில் ஒரு போலி கணக்கு பராமரிக்கப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அந்தக் கணக்கின் ஆணை கடிதம் காணாமல் போயுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

2006ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் திகதி கொழும்பு 10, டார்லி வீதியில் உள்ள மக்கள் வங்கியில் சிரிலிய சவிய என்ற பெயரில் 143/1/001/4/6235069 என்ற கணக்கு எண்ணில், தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்காமல், தவறான தகவல்களை சமர்ப்பித்து கணக்கு திறக்கப்பட்டுள்ளது. இந்தக் கணக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் கணக்கின் இருப்பு தற்போது 43 மில்லியனாக ரூபாயாக உள்ளது. சிரிலிய அமைப்பிற்கு சொந்தமான வங்கிக் கணக்கின் தலைவர் ஷிரந்தி ராஜபக்சவாகும். கணக்கின் செயலாளராக கல்யாணி திசாநாயக்க மற்றும் பொருளாளராக நிரோஷா ஜீவனி என்பவர்கள் உள்ளனர்.

88 சந்தர்ப்பங்களில் 8 கோடி 29 லட்சம் ரூபாய் வைப்பு செய்யப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக 129 சந்தர்ப்பங்களில் 3 கோடியே 90 லட்சம் ரூபாக்கும் அதிகமான மீளப்பெறப்பட்டுள்ளது.

இந்த வங்கியில் சிரிலிய என்ற பெயரில் 100 லட்சம் ரூபாய் நிலையான வைப்புத் தொகையும் திறக்கப்பட்டுள்ளது. மேலும் நிதிக் குற்றப் பிரிவு இந்தக் கணக்கில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.

அதேவேளை, திறைசேரியிடமிருந்து சிஎஸ்என் சேனல் பெற்ற தொகை 152 மில்லியன் ரூபாயாகும். தனது தாய் மற்றும் தந்தைக்கு கல்லறைகள் கட்டுவதற்காக நகர மேம்பாட்டு அதிகாரசபையிடமிருந்து கோட்டபாய ராஜபக்ச பெற்ற தொகை 35 மில்லியன் ரூபாவாகும்.

மல்வானை பிரதேசத்தில் ஒரு வீட்டை வாங்குவதற்காக பசில் ராஜபக்ச 208 மில்லியன் ரூபாய் பெற்றுள்ளார்” என பிரதி அமைச்சர் சுனில் வட்டகல மேலும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பாரிய நிதி மோசடியில் பல அரசியல்வாதிகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் கடூழிய சிறைத்தண்டனையை 20 வருடங்களுக்கு மேல் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Tags: BatticaloaBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழி பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு; சர்வதேச விசாரணை கோரி போராட்டம்!
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழி பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு; சர்வதேச விசாரணை கோரி போராட்டம்!

July 22, 2026
11 இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு; முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன பிணையில் விடுவிப்பு
செய்திகள்

11 இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு; முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன பிணையில் விடுவிப்பு

July 22, 2026
கல்முனை உப பிரதேச செயலக விவகாரம்; சுமந்திரன் வழக்கை வாபஸ் பெறுவாரா? – முன்னாள் மாநகர சபை உறுப்பினர் கேள்வி
அரசியல்

கல்முனை உப பிரதேச செயலக விவகாரம்; சுமந்திரன் வழக்கை வாபஸ் பெறுவாரா? – முன்னாள் மாநகர சபை உறுப்பினர் கேள்வி

July 22, 2026
“புதிய ஆட்சியிலும் பழைய கொள்கையா?”; கன்னியா வெந்நீரூற்று பகுதியில் பிள்ளையார் கோவிலை இடித்து விகாரை அமைப்பு பணிகள் தீவிரம்
செய்திகள்

“புதிய ஆட்சியிலும் பழைய கொள்கையா?”; கன்னியா வெந்நீரூற்று பகுதியில் பிள்ளையார் கோவிலை இடித்து விகாரை அமைப்பு பணிகள் தீவிரம்

July 22, 2026
வடக்கு, கிழக்கு தொல்லியல் விவகாரம்; சமத்துவமான தீர்வை கோரும் தமிழ் பிரதிநிதிகள்!
செய்திகள்

வடக்கு, கிழக்கு தொல்லியல் விவகாரம்; சமத்துவமான தீர்வை கோரும் தமிழ் பிரதிநிதிகள்!

July 22, 2026
அம்பாறையில் அதிகரிக்கும் நிதி மோசடிகள்; கிராம மக்களுக்கு மத்திய வங்கி விழிப்புணர்வு!
செய்திகள்

அம்பாறையில் அதிகரிக்கும் நிதி மோசடிகள்; கிராம மக்களுக்கு மத்திய வங்கி விழிப்புணர்வு!

July 22, 2026
Next Post
அமெரிக்கா நடத்தியத் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுக்கும் – ஈரான் ஜனாதிபதி

அமெரிக்கா நடத்தியத் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுக்கும் - ஈரான் ஜனாதிபதி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.