இஸ்ரேலின் மிகச் சிறந்த வான் பாதுகாப்பு அமைப்பாக கருதப்படும் ‘அயர்ன் டோம்’ அமைப்பை ருமேனியா வாங்குவதற்குத் திட்டமிட்டுள்ளது.
மேற்காசிய நாடான இஸ்ரேலிடம் உள்ள அயர்ன் டோம் எனப்படும் வான் பாதுகாப்பு அமைப்பு உலகப் புகழ்பெற்றது. ஏவுகணை தாக்குதல்களில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள இஸ்ரேல் உருவாக்கியது இந்த அமைப்பு.
இது உலகின் சிறந்த வான் பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. எதிரி நாட்டு ஏவுகணைகள், போர் விமானங்கள், ட்ரோன் எனப்படும் ஆளில்லா சிறிய விமானங்கள் போன்றவற்றை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.

குறுகிய மற்றும் மிகக் குறுகிய வான் பாதுகாப்பு அம்சங்களுடன், அயர்ன் டோம் அமைப்பை வாங்க, ஐரோப்பிய நாடான ருமேனிய திட்டமிட்டு உள்ளது.
இதற்கான ஒப்பந்தம் வரும் நவம்பருக்குள் கையெழுத்தாகும் என, ருமேனியாவின் இராணுவ அமைச்சர் அயோனுஸ் மோஸ்டீனு தெரிவித்துள்ளார்.
உலக அளவில் புகழ்பெற்றதாக இருப்பினும், அயர்ன் டோம் அமைப்பை ஒரு சில நாடுகள் மட்டுமே வாங்கியுள்ளன. இதற்கு முக்கிய காரணம், அதிக வான் பரப்பை இந்த அமைப்பால் முழுமையாக பாதுகாக்க முடியாது.
அமெரிக்கா, கனடா, பின்லாந்து என, ஒரு சில நாடுகள் மட்டுமே, அயர்ன் டோம் அமைப்பின் குறிப்பிட்ட சில பகுதிகளை மட்டும் வாங்கியுள்ளன.
இந்தியா, அசர்பைஜான் உட்பட பல நாடுகளும், இந்த அமைப்பை வாங்க ஆர்வம் தெரிவித்தன. ஆனால் தொடர்ந்து பேச்சுவார்த்தை இடம்பெற்று வருகின்றன.








