சபரகமுவ பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் மாணவனொருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட குழுவின் அறிக்கை, பல்கலைகழக உபவேந்தரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சபரகமுவ பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் சுனில் சாந்த தெரிவித்துள்ளதாவது,
மாணவன் உயிர்மாய்ப்பு குறித்து கையளிக்கப்பட்ட இந்த அறிக்கை அடுத்த வாரம் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு சமர்ப்பிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த மாணவரின் மரணம் தொடர்பான கண்டுபிடிப்புகளை பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு வெளியிடும் எனத் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மாணவர்களிடமிருந்து சுமார் 70 வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதாக குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், வாய்மொழி மற்றும் எழுத்துப்பூர்வ அறிக்கைகள், காணொளிகள், புகைப்படங்கள் மற்றும் சமூக ஊடக உள்ளடக்கத்துடன் 150 மணி நேரத்திற்கும் மேலான சாட்சியங்கள் பெறப்பட்டுள்ளதாக விசாரணைக்குழு தெரிவித்துள்ளது.








