காத்தான்குடி 5 ஜாமியுள்ளாபிரீன் வித்தியாலயத்தில் கடந்த (01) ஆம் திகதி, “புவி வெப்பமடைதலில் இருந்து விடுதலை பெறுவோம்” என்ற தொனிப்பொருளில் 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற சித்திரப் போட்டியில் பங்கேற்ற 114 பாடசாலை மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.
வித்தியாலய அதிபர் பாறுக் சேர் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் சிந்து உஷா, மன்ற ஸ்தாபக தலைவி ஜாஹிதா ஜலால்தீன், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஊக்குவிக்கும் வகையில் மாணவர்களின் கலையும் அர்ப்பணிப்பும் பாராட்டப்படவேண்டியதாக விழாவில் உரையாற்றியவர்கள் குறிப்பிட்டனர்.























