கல்முனை எமது நாட்டின் சுயாதீனத்தையும் சமூக நலனையும் பாதிக்கும் இஸ்ரேலிய ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் பொறுப்புக் கட்சிகள் மற்றும் சமூக தலைவர்களுக்கே என்றும் உள்ளது என்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பு நேற்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளர் மௌலவி முஹம்மத் மிப்லால், செயலாளர் நாயகன் மற்றும் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான் உள்ளிட்டோர் இந்த கருத்துக்களை முன்வைத்து, முஸ்லிம் காங்கிரசின் எதிர்ப்பை ஊக்குவித்து, சட்டவிரோதமாக இயங்கும் சபாத் இல்லங்களை பொத்துவிலில் மூட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
கூட்டமைப்பினர், இந்த நாட்டின் முக்கிய வருமான ஆதாரமான சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் பொறுப்பும் உள்ளதாகவும், அரசியல் மற்றும் சமூக நலனுக்குப் புறம்பான எந்தவொரு அத்துமீறலையும் அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்தனர்.
மேலும், முஸ்லிம் நாடுகள் அல்லது மேற்கத்திய நாடுகள் செய்வதாக இருந்தாலும் அத்துமீறல்களை எதிர்க்கும் தங்கள் உறுதியையும் தெரிவித்தனர்.
பொத்துவிலில் உள்ள சட்டவிரோதமான இஸ்ரேலிய வழிபாட்டு தளம் அருகே பள்ளிவாசல் இருள் சூழ்ந்து, வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறியுள்ளது எனவும், இதனை எதிர்காலத்தில் மூட அரசியல் தலைவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.
காங்கிரஸ் தலைவர்களும் அரசியல் பிரச்சனைகளில் செயல்படாமல், சமூக நலனுக்காக அவசியமான நடவடிக்கைகள் எடுக்காமல் இருப்பது ஏமாற்றுவதாகவும், எதிர்காலத்தில் முஸ்லிம் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து சமூக உரிமைகளுக்காக ஒருங்கிணைந்த கூட்டணியை அமைக்கும் பணியில் இருக்கின்றனர் எனக் கூறினர்.
அவர்களின் கூற்றில், முஸ்லிங்கள் ஒற்றுமையை பலப்படுத்தி, நாட்டின் சுயாதீனத்தையும், அழகிய இயற்கையையும் எதிர்கால சந்ததிக்கு பாதுகாப்பது கடமை என்றும், இஸ்ரேலிய அத்துமீறல்களை கண்டித்து கூட்டமைப்பினர் பங்கேற்கும் அனைத்து சபைகளிலும் கண்டன தீர்மானங்களை நிறைவேற்ற தயார் என்றும் தெரிவித்தனர்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பிரதிநிதிகள், கலாநிதி ஹக்கீம் ஷெரீப், இணைப்பாளர் ஏ.எம். அஹூவர் உட்பட பல உயர் பதவி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.












