மீகொடையில் இன்று செவ்வாய்க்கிழமை (12) அதிகாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் அட்டிகல்லே வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போதே, அவர் மீது காரில் பயணித்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது, அவர் பல துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
சந்தேக நபர்களை அடையாளம் கண்டு கைது செய்ய பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.








