மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் ஹர்த்தாலுக்காக கடைகளை மூடுமாறு வலியுறுத்தியதற்கு எதிராக தேசிய மக்கள் சக்தியின் ஐந்து மாநகரசபை உறுப்பினர்கள் இன்று (18) திங்கட்கிழமை மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு சென்று அதில் ஒரு உறுப்பினர் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்தார்.
அதேபோல், ஈரோஸ் கட்சியின் இரா. பிரபாகரனும், முதல்வர் வர்த்தகர்களை மிரட்டி கடைகளை பூட்டியதாக குற்றம்சாட்டி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து மாநகரசபை முதல்வர் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்ற வேளை தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் மற்றும் முதல்வர் ஆகியோர் பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் சமாதானமாகிய நிலையில் குறித்த முறைப்பாடு முடிவுறுத்தப்பட்டது.
அதேசமயம் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் ஹர்த்தாலுக்காக கடைகளை மூடுமாறு வலியுறுத்தியதோடு, கடைகளை மூடாவிட்டால் அனுமதி பத்திரம் நிறுத்தப்படும் என வர்த்தகர்களை மிரட்டி அதிகார துஷ்பிரயோகம் மேற்கொண்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.








