அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வெளிப்படையாக ரஷ்யாவின் ஆதரவாளராகச் செயல்படுகிறார் என, போர்த்துகல் ஜனாதிபதி மார்செலோ ரெபெலோ டிசோசா குற்றஞ்சாட்டியுள்ளார்.
கிழக்கு ஐரோப்பிய நாடான யுக்ரைன், சர்வதேச இராணுவ அமைப்பான, நேட்டோவில் இணைய முயற்சித்தது.
இது தங்களுக்கு அச்சுறுத்தல் எனக் கூறி, யுக்ரைன் மீது 2022இல் ரஷ்யா போர் தொடர்ந்தது.
இந்த போரை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முயற்சித்து வருகிறார்.

இது தொடர்பாக கடந்த ஓகஸ்ட் 15 இல் அலஸ்காவில், ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதைத்தொடர்ந்து, வெள்ளை மாளிகையில் யுக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்களையும் ட்ரம்ப் சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில், நேட்டோவில் அங்கம் வகிக்கும் ஐரோப்பிய நாடான போர்த்துகலின் ஜனாதிபதி மார்செலோ ரெபெலோ, உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவின் ஜனாதிபதி ட்ரம்ப், பாரபட்சமின்றி ரஷ்யாவின் கருவியாக இருப்பதாகவும், அவர் ரஷ்யாவை வெளிப்படையாக ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால், பாரம்பரியமாக அமெரிக்காவுடன் கூட்டாளிகளாக இருந்த யுக்ரைன் மற்றும் ஐரோப்பிய நாடுகள், தற்போது தங்கள் நலன்களைப் பாதுகாக்க அழுத்தம் தரவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன எனவும், ட்ரம்ப் ஒரு தரப்புடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறார் என்றும் போர்த்துகல் ஜனாதிபதி குற்றஞ்சாட்டியுள்ளார்.








