Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உதயநிதியின் தலைக்கு 10 இலட்சம் விலை பேசிய சாமியார்

உதயநிதியின் தலைக்கு 10 இலட்சம் விலை பேசிய சாமியார்

11 months ago
in அரசியல், உலக செய்திகள், செய்திகள்

ஒரு சாமியார் என் தலையை சீவி கொண்டுவந்தால் ரூ.10 இலட்சம் தருவேன் என்றும் மற்றொரு சாமியார் ரூ.1 கோடி தருவேன் என்றும் கூறினார்கள் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

தமிழ்நாடு துணை முதலமைச்சரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், சென்னையில் ‘சமூக ஊடக சவால்களை எதிர்கொள்வது’ என்ற தலைப்பில் நடைபெற்ற பயிற்சிப் பட்டறையில் பேசியபோது, இந்தியாவில் உள்ள “பாசிச கும்பல்” பொய் செய்திகளை பரப்புவதையே முழுநேர வேலையாக செய்து வருவதாக கடுமையாக விமர்சித்தார்.

இந்தப் பயிற்சி பட்டறை, திமுக இளைஞரணி சார்பில், சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை எதிர்கொள்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், உதயநிதி தனது முந்தைய பேச்சு தொடர்பாக எழுந்த சர்ச்சைகளையும், அதைத் தொடர்ந்து பரவிய பொய் வதந்திகளையும் விவரித்தார். உதயநிதி, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு (2022-ல்) ஒரு நிகழ்ச்சியில் பேசியதை மேற்கோள் காட்டி, “நான் அப்போது, ‘பிறப்பால் ஏற்றத்தாழ்வு கிடையாது, அப்படி இருந்தால் அதை ஒழித்துக் கட்ட வேண்டும்’ என்று பேசினேன். ஆனால், எனது பேச்சை திரித்து, நான் இனப்படுகொலையை தூண்டி விட்டதாக பொய் செய்திகளை பரப்பினார்கள்.

நான் சொல்லாதவற்றை சொன்னதாக நாடு முழுவதும் வதந்தி கிளப்பினார்கள்,” என்று கூறினார். இந்த பொய் பிரசாரத்தின் ஒரு பகுதியாக, சிலர் அவரது தலைக்கு விலை வைத்து, ஒரு சாமியார் ரூ.10 இலட்சமும், மற்றொரு சாமியார் ரூ.1 கோடியும் தருவதாக அறிவித்ததாக அவர் சுட்டிக்காட்டினார். “என்னை மன்னிப்பு கேட்கச் சொன்னார்கள். ஆனால், நான் பேசியதில் எந்தத் தவறும் இல்லை. மன்னிப்பு கேட்க முடியாது. எந்த நீதிமன்றத்திற்கு வேண்டுமானாலும் செல்லுங்கள், நான் வழக்கை எதிர்கொள்வேன்,” என்று உறுதியாக தெரிவித்தார்.

இந்தப் பயிற்சி பட்டறையில், சமூக ஊடகங்களில் பொய் செய்திகளை எதிர்கொள்வதற்கு இளைஞர்கள் தயாராக வேண்டும் என்று உதயநிதி வலியுறுத்தினார். “பாசிச கும்பல், சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி, பொய்யான தகவல்களை பரப்புவதையே தங்கள் முழுநேர வேலையாக செய்கிறார்கள். இதற்கு எதிராக, நாம் உண்மையை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். திமுகவின் கொள்கைகளையும், மக்களுக்காக செய்யப்படும் திட்டங்களையும் சமூக ஊடகங்கள் மூலம் தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டும்,” என்று அவர் கூறினார்.

மேலும், தமிழ்நாடு அரசு மக்களுக்காக செயல்படுத்தி வரும் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க, இளைஞரணி உறுப்பினர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்தி மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.இந்த நிகழ்ச்சியில், உதயநிதி, சமூக ஊடகங்களின் நன்மைகளையும், அதன் மூலம் எழும் சவால்களையும் விரிவாக எடுத்துரைத்தார். “சமூக ஊடகங்கள் ஒரு சக்திவாய்ந்த கருவி. ஆனால், இதை தவறாக பயன்படுத்துவோர், சமூகத்தில் பிளவை ஏற்படுத்த முயல்கின்றனர். இதற்கு எதிராக, நாம் உண்மையை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

தமிழ்நாட்டில் நாம் செய்யும் நல்ல திட்டங்களை, மக்களுக்கு எடுத்துச் சொல்ல இளைஞர்கள் முன்வர வேண்டும்,” என்று அவர் மேலும் தெரிவித்தார். இந்த பயிற்சி பட்டறை, திமுக இளைஞரணி உறுப்பினர்களுக்கு சமூக ஊடகங்களை பயன்படுத்தி உண்மையை பரப்புவதற்கு பயிற்சி அளிக்கும் நோக்கில் நடத்தப்பட்டது, மேலும் இது தமிழ்நாடு முழுவதும் உள்ள இளைஞர்களை ஊக்குவிக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewspoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சிறைச்சாலையை நிர்வகிக்கத்தெரியாத அனுரஅரசு பதவி விலக வேண்டும்; சஜித் பிரேமதாச
அரசியல்

சிறைச்சாலையை நிர்வகிக்கத்தெரியாத அனுரஅரசு பதவி விலக வேண்டும்; சஜித் பிரேமதாச

August 2, 2026
மஹர சிறைச்சாலையை சுற்றியுள்ள பகுதிகளின் ஊடரங்கு நீக்கப்பட்டது
செய்திகள்

மஹர சிறைச்சாலையை சுற்றியுள்ள பகுதிகளின் ஊடரங்கு நீக்கப்பட்டது

August 2, 2026
இலங்கையின் சமகால நிலவரங்களை பார்த்து அச்சம்கொண்டுள்ள 10 கோடி ரூபாய் தண்டம் விதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி?
செய்திகள்

இலங்கையின் சமகால நிலவரங்களை பார்த்து அச்சம்கொண்டுள்ள 10 கோடி ரூபாய் தண்டம் விதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி?

August 2, 2026
யாழில் தீ மூட்டி உயிரிழந்த இரட்டைச் சகோதரிகள்; பொலிஸார் விசாரணை
செய்திகள்

யாழில் தீ மூட்டி உயிரிழந்த இரட்டைச் சகோதரிகள்; பொலிஸார் விசாரணை

August 2, 2026
கருவாடு கிலோ விலை 4,000 வரை அதிகரிப்பு
செய்திகள்

கருவாடு கிலோ விலை 4,000 வரை அதிகரிப்பு

August 2, 2026
சிறிதரனின் செயற்பாடுகள் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்; சாணக்கியன் எச்சரிக்கை
அரசியல்

சிறிதரனின் செயற்பாடுகள் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்; சாணக்கியன் எச்சரிக்கை

August 2, 2026
Next Post
புலமைப்பரிசில் பரீட்சையில் காலி மற்றும் யாழ் முதலிடம்

புலமைப்பரிசில் பரீட்சையில் காலி மற்றும் யாழ் முதலிடம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.