வடக்கு, கிழக்கு மாகாணங்களில், நீண்டகாலமாக நிலவும் காணி தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதில், ஐக்கிய நாடுகள் சபை, இலங்கை அரசாங்கத்திற்கு உதவவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இதற்காக ஒரு புதிய திட்டத்தை ஐக்கிய நாடுகள் சபை முன்னெடுக்கவுள்ளது.
போர் முடிவடைந்து 16 ஆண்டுகளுக்குப் பிறகும் ஏராளமான உரிமைகோரல்கள் தீர்க்கப்படாமல் உள்ளன.
இந்தநிலையில், விவசாய அமைச்சின் கீழ் உள்ள அரச நிறுவனங்களுடன் தாம் கலந்துரையாடல்களை நடத்தி வருவதாக, ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் தெரிவித்துள்ளார்.








