மட்டக்களப்பு, கல்குடா கல்வி வலயத்தைச் சேர்ந்த கிரான் விவேகானந்தா வித்தியாலய மாணவி கோபு திக்பிக்ஷா, சமீபத்தில் வெளிவந்த 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் 174 புள்ளிகளைப் பெற்று கல்குடா வலயத்தில் முதல்நிலை பெற்றுள்ளார்.
இம்மாணவி தனது பாடசாலைக்கும், குடும்பத்திற்கும் பெருமை சேர்த்ததோடு, இது பாடசாலை வரலாற்றில் இதுவரை பெறப்பட்ட மிக உயர்ந்த பெறுபேறு என்பதும் சிறப்பம்சமாகும்.








