வீதிகளில் பொறுப்புக்கூறலை ஊக்குவித்து வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தவும் பொது தொடர்புகளின் போது தவறான நடத்தைகளைக் குறைக்கவும் இலங்கை காவல்துறை விரைவில் அனைத்து போக்குவரத்து அதிகாரிகளுக்கும் உத்தியோக ஆடையில் அணியும் கேமராக்களை வழங்கத் தொடங்க உள்ளது.
இக்கேமராக்கள் பணியில் இருக்கும்போது அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான தொடர்புகளைப் பதிவு செய்யும் நிலையில் ஒவ்வொரு சந்திப்பையும் பதிவு செய்வதன் மூலம் இலஞ்சம் மற்றும் ஊழலை தடுக்கவும் இரு தரப்பினரும் சட்டவிரோதமாகச் செயல்படுவதை கடினமாக்கவும் தகராறுகள் அல்லது புகார்கள் ஏற்பட்டால் நம்பகமான ஆதாரங்களை வழங்கவும் முடியும் என காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஏஎஸ்பி எஃப்.யு. வூட்லர் தெரிவித்தார்.

இதற்கிடையில் இந்த ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் உள்ள அனைத்து தடுப்பு மையங்களிலும் காவல்துறை சிசிடிவி கேமராக்களை நிறுவுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட உள்ளன என்றும், தீவு முழுவதும் உள்ள 608 காவல் நிலையங்களில் முதலில் மிகப் பரபரப்பான மற்றும் அதிக முன்னுரிமை உள்ள இடங்களில் நிறுவல் தொடங்கப்படும் என்றும், ஏற்கெனவே தேவையான நிதி அங்கீகரிக்கப்பட்டுள்ளதால் கொள்முதல் செயல்முறை முடிந்ததும் பணிகள் தொடங்கும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.








