வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் வாக்களிக்கும் வாய்ப்பைப் பெறும் வகையில் சட்டங்களைத் திருத்துவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக பல அமைச்சுக்களின் உயர் அதிகாரிகளைக் கொண்டு ஒரு சிறப்பு குழுவை நியமிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
இந்தக் குழு, வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தேர்தல்களில் பங்கேற்கும் சட்ட ரீதியான மாற்றங்கள், நடைமுறைகள் மற்றும் தேவையான உத்தரவாதங்களை ஆராய்ந்து பரிந்துரைகள் வழங்கும்.

சட்டத் திருத்தங்கள் மூலம், வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்துவதற்கான நடைமுறை எளிமையாக்கப்படுமெனவும், தேர்தல் செயல்முறைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகாரிகளின் குழு தயாரிக்கும் அறிக்கை மற்றும் பரிந்துரைகள் விரைவில் அமைச்சரவை முன் சமர்ப்பிக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.








