Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கூகுள் அமெரிக்க நிறுவனமா? இந்திய நிறுவனமா?; ட்ரம்பின் ஆணவ பேச்சுக்கு சுந்தர் பிச்சை பதிலடி

கூகுள் அமெரிக்க நிறுவனமா? இந்திய நிறுவனமா?; ட்ரம்பின் ஆணவ பேச்சுக்கு சுந்தர் பிச்சை பதிலடி

9 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

கூகுள் அமெரிக்க நிறுவனமா? இந்திய நிறுவனமா? என சுந்தர் பிச்சைக்கு அமெரிக்க அதிபரின் ஆணவ பேச்சுக்கு , எனக்கு கல்வி, அறிவு கொடுத்தது இந்தியா தான்.. நான் அமெரிக்காவுக்கு சேவை செய்யவில்லை. மனித குலத்திற்கு சேவை செய்கிறேன் கூகுள் முதன்மை செயல் அலுவலர் சுந்தர் பிச்சை பதிலளித்துள்ளமை டிரம்பை அதிர வைத்துள்ளது.

உலக பொருளாதார மாநாட்டில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தியாவை உலக அரங்கில் அவமதிக்க முயற்சி செய்தபோது, சுந்தர் பிச்சையின் அமைதியான அதே நேரத்தில் கொடுத்த அழுத்தமான பதிலால் சர்வதேச அளவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது வெறும் கருத்து மோதலாக அல்லாமல், கௌரவம், வலிமை, மற்றும் உண்மையான தலைமைத்துவத்தின் வெளிப்பாடாக அமைந்தது. மாநாட்டில் இந்தியாவின் சார்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஆகியோர் அமர்ந்திருந்தனர்.

அப்போது, ட்ரம்ப், இந்தியா தொழில்நுட்பம் மற்றும் ஜனநாயகம் பற்றி பெரிதாக பேசுகிறது. ஆனால் அமெரிக்க நிறுவனங்கள், அமெரிக்க அமைப்புகள் இல்லாமல் இந்தியாவின் இந்த முன்னேற்றம் சாத்தியமாகுமா? என்று கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்பின் பேச்சுக்கு , சுந்தர் பிச்சை பதிலளிக்க ஆரம்பித்தார்.

நான் இந்தியாவில் பிறந்தவன். எனது நாடு எனக்கு கல்வியை அளித்தது, மதிப்புகளை கற்றுக்கொடுத்தது. அறிவுக்கும் தொழில்நுட்பத்திற்கும் பாஸ்போர்ட் கிடையாது. இந்திய ஆசிரியர்கள், பொறியாளர்கள், மற்றும் குடும்பங்கள் கொடுத்த தியாகம்தான் எனது பயணத்திற்கு அடித்தளம். சுந்தரின் இந்த நேர்மையான பதில் ட்ரம்ப்பை வியக்க வைத்தது. சிறிது நேரம் கழித்து ஜெய்சங்கர்,

“கூட்டுறவுகள் பலவீனம் அல்ல, அவைதான் பலம்” என்று கூறியபோது அரங்கமே கரவொலியால் அதிர்ந்தது. இரண்டாம் நாள், ட்ரம்ப் தனது அதிகாரத்தை கொண்டு மீண்டும் இந்தியாவை மிரட்ட முயன்றார்.

“இந்தியா அமெரிக்காவின் விதிமுறைகளை மீறினால் வர்த்தக தடைகளை எதிர்கொள்ள நேரிடும். கூகுள் அமெரிக்காவுடனா அல்லது இந்தியாவுடனா?” என்று சுந்தர் பிச்சையை நேரடியாக கேள்வி கேட்டுள்ளார்.

சுந்தர் பிச்சை சிறிது நேரம் அமைதியாக இருந்தார். பின்னர், “நான் எப்போதும் முதலில் மனித குலத்திற்கே சேவை செய்வேன். அமெரிக்கா எனக்கு வாய்ப்புகளை தந்தது, இந்தியா எனக்கு வேர்களை தந்தது. நான் ஒன்றை கௌரவிக்க மற்றொன்றை தேர்ந்தெடுக்க தேவையில்லை.

நான் படைக்கும்போது, புதுமை காணும்போது, நான் இரு நாடுகளுக்கும் சேவை செய்கிறேன். நான் அனைவருக்கும் சேவை செய்கிறேன்” என்று ஆழமான பதில் அளித்தார்.

மாநாட்டின் இறுதி நாளில், ட்ரம்ப் தன் கோபத்தை வெளிப்படையாக காட்டினார். “இந்தியா இன்று இரவுக்குள் அமெரிக்காவுக்கு முழுமையாக தன் சந்தையைத் திறக்க வேண்டும். இல்லையென்றால், தடைகளை சந்திக்கும். கூகுள் அமெரிக்காவுடனா அல்லது இந்தியாவுடனா என்பதை இப்போதே சொல்ல வேண்டும் என்று இறுதி எச்சரிக்கை விடுத்தார்.

சுந்தர் பிச்சை அமைதியாக எழுந்து நின்றார். “ஒரு நாடு அல்லது எந்தவொரு தனிநபரோ மிரட்டினால் அதற்கு அச்சத்தால் அடிபணிவதை நான் விரும்ப மாட்டேன். பயத்தால் ஒருபோதும் மூலைக்கு தள்ளப்பட மாட்டேன், மரியாதைக்கு மட்டுமே கட்டுப்படுவேன்.

எந்த தேசமாக இருந்தாலும், அடிபணிய வேண்டும் என்று கேட்டால், நான் ஒருபோதும் சரணடைய மாட்டேன்” என்று தீர்க்கமாக கூறினார்.

டிரம்புக்கு பதிலடி கொடுத்த சுந்தர் பிச்சையின் இந்த பேச்சை அரங்கத்தில் இருந்த பல தலைவர்கள் எழுந்து நின்று கைதட்டினர். இந்த மாநாடு வெறும் வணிக பேச்சுவார்த்தையாக இல்லாமல், மனிதநேயம், தலைமைத்துவம் மற்றும் கொள்கைகள் தொடர்பான ஒரு திருப்புமுனையாக மாறியது. சுந்தர் பிச்சையின் இந்த வார்த்தைகள், பல கோடி இளைஞர்களுக்கு நம்பிக்கையையும், பெருமையையும் விதைத்தது.

அவர், அதிகாரத்திற்கு முன்னால் பணிந்து போக மறுத்து, தனது பணிவு, மரியாதை, மற்றும் உண்மையின் மூலம் ஒரு தேசத்தின் கௌரவத்தை நிலைநாட்டினார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் கைது
செய்திகள்

ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் கைது

June 20, 2026
O/L பரீட்சையில் 100% சித்தி பெற்று அடாவத்தை திருமகள் தமிழ் வித்தியாலயம் வரலாற்றுச் சாதனை
செய்திகள்

O/L பரீட்சையில் 100% சித்தி பெற்று அடாவத்தை திருமகள் தமிழ் வித்தியாலயம் வரலாற்றுச் சாதனை

June 20, 2026
காணாமற்போனவர்கள் விவகாரம்; 7,000க்கும் மேற்பட்டோரின் அடிப்படை தகவல்கள் சேகரிப்பு
செய்திகள்

காணாமற்போனவர்கள் விவகாரம்; 7,000க்கும் மேற்பட்டோரின் அடிப்படை தகவல்கள் சேகரிப்பு

June 20, 2026
பதுளை – நானுஓயா இடையிலான ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்
செய்திகள்

பதுளை – நானுஓயா இடையிலான ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்

June 20, 2026
மாணவி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு வீடியோ இணையத்தில் வெளியீடு; அதிபர், பிரதி அதிபர் மற்றும் மாணவர் ஒருவர் கைது!
செய்திகள்

மாணவி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு வீடியோ இணையத்தில் வெளியீடு; அதிபர், பிரதி அதிபர் மற்றும் மாணவர் ஒருவர் கைது!

June 20, 2026
சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளுக்கு சிறப்பு நீதிமன்றம் அமைத்து கடும் தண்டனை வழங்க வேண்டும்; அந்தனிசில் ராஜ்குமார்!
காணொளிகள்

சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளுக்கு சிறப்பு நீதிமன்றம் அமைத்து கடும் தண்டனை வழங்க வேண்டும்; அந்தனிசில் ராஜ்குமார்!

June 20, 2026
Next Post
கடந்த 8 மாதங்களில் 524 பெண்கள் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது!

கடந்த 8 மாதங்களில் 524 பெண்கள் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.