Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு கருவப்பங்கேணியை சேர்ந்த தந்தையும் 22 வயது மகனும் ஐஸ் போதைப்பொருளுடன் கைது

மட்டு கருவப்பங்கேணியை சேர்ந்த தந்தையும் 22 வயது மகனும் ஐஸ் போதைப்பொருளுடன் கைது

10 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு நகரில் ஐஸ் போதைப் பொருள் வியாபாரியான கருவப்பங்கேணியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டு மூன்று வாரத்தில் அதே பகுதியில் வைத்து 21 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட குறித்த இளைஞரின் தந்தையாரை எதிர்வரும் 25 ம் திகதிவரை பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய மட்டு நீதவான் நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை (22) உத்தரவிட்டுள்ளது.

பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு ஜெயசிங்கவுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில், பொலிஸ் கொஸ்தாப்பர் சமரபந்து தலைமையில் ஜயசிங்க, ரதன் உட்பட்ட குழுவினர் சம்பவ தினமான கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) இரவு நகர் பகுதியில் உள்ள கண்ணகை அம்மன் கோயில் வீதியில் மாறு வேடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இதன்போது பை ஒன்றுடன் நடந்து வந்த குறித்த நபரை கண்காணிப்பில் ஈடுபட்ட பொலிசார் சுற்றி வளைத்து மடக்கி பிடித்து சோதனை செய்தனர். இதன் போது வியாபாரத்துக்காக எடுத்துச் செல்லப்பட்ட 21 கிராம் ஐஸ் போதை பொருளுடன் அவரை கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர் கருவப்பங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடையவர் எனவும், இவரின் 22 வயதுடைய மகன் மற்றும் லயன்ஸ் கிளப் வீதியைச் சேர்ந்த 24 வயதுடைய இருவர் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் ஐஸ் போதை பொருளுடன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அதே பகுதியில் வைத்து குறித்த இளைஞரின் தந்தையாரை கைது செய்த பொலிசார் அவரை பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ள நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது அவரை எதிர்வரும் 25 ம் திகதிவரை பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய நீதவான் அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கற்பிட்டியில் சட்டவிரோதமாக சங்கு பதுக்கிய இருவர் கைது!
செய்திகள்

கற்பிட்டியில் சட்டவிரோதமாக சங்கு பதுக்கிய இருவர் கைது!

August 1, 2026
மீன்பிடிக்க சென்றவர் காட்டு யானைத் தாக்கி பலி!
செய்திகள்

மீன்பிடிக்க சென்றவர் காட்டு யானைத் தாக்கி பலி!

August 1, 2026
சாய்ந்தமருதில் பிரபல உணவகத்தில் பாரிய தீ விபத்து; தீயணைப்பு சேவை தாமதம் என மக்கள் குற்றச்சாட்டு!
செய்திகள்

சாய்ந்தமருதில் பிரபல உணவகத்தில் பாரிய தீ விபத்து; தீயணைப்பு சேவை தாமதம் என மக்கள் குற்றச்சாட்டு!

August 1, 2026
மரண தண்டனை விதிக்கப்பட்ட பூஜித் மற்றும் ஹேமசிறியின் வாக்குமூலங்கள்
மட்டு செய்திகள்

மரண தண்டனை விதிக்கப்பட்ட பூஜித் மற்றும் ஹேமசிறியின் வாக்குமூலங்கள்

August 1, 2026
மின்னல் தாக்கிய சில நொடிகளில் தீப்பிடித்த வீடு
செய்திகள்

மின்னல் தாக்கிய சில நொடிகளில் தீப்பிடித்த வீடு

August 1, 2026
“சாரை பாம்புக்கு மண்ணெண்ணெய் ஊற்றினால் பதறுவது போல எதிர்க்கட்சிகள் செயற்படுகின்றன”; எம்.பி. கந்தசாமி பிரபு
செய்திகள்

“சாரை பாம்புக்கு மண்ணெண்ணெய் ஊற்றினால் பதறுவது போல எதிர்க்கட்சிகள் செயற்படுகின்றன”; எம்.பி. கந்தசாமி பிரபு

August 1, 2026
Next Post
புதிய நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு சட்டமூலம்; அமைச்சரவை அங்கீகாரம்

புதிய நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு சட்டமூலம்; அமைச்சரவை அங்கீகாரம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.