அம்பாந்தோட்டை, தங்காலை, என்னபிட்டிய பிரதேசத்தில் உள்ள ஜயசுமனராம விகாரையின் தேரரை தாக்கிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட தங்காலை நகர சபை உறுப்பினரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 01 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு தங்காலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
42 வயதுடைய தங்காலை நகர சபை உறுப்பினர் ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
செப்டெம்பர் 03 ஆம் திகதி தங்காலையில் நடைபெற்ற பெரஹெர ஒன்றில் கலந்துகொண்ட நடன குழுவுக்கு பணம் செலுத்துவது தொடர்பில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தங்காலை பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட தங்காலை நகர சபை உறுப்பினரின் தலைமையில் இந்த பெரஹெர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தங்காலை பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலில் ஜயசுமனராம விகாரையின் தேரரும் மற்றுமொரு நபரும் காயமடைந்துள்ளதாகவும் தங்காலை பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் தங்காலை பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபரான தங்காலை நகர சபை உறுப்பினர் செப்டெம்பர் 21 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டுதாகவும் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
இதனை கருத்தில் கொண்ட நீதவான் கைதுசெய்யப்பட்ட தங்காலை நகர சபை உறுப்பினரை ஒக்டோபர் மாதம் 01 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.








