Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தேரரை தாக்கிய நகரசபை உறுப்பினருக்கு விளக்கமறியல்

தேரரை தாக்கிய நகரசபை உறுப்பினருக்கு விளக்கமறியல்

10 months ago
in செய்திகள்

அம்பாந்தோட்டை, தங்காலை, என்னபிட்டிய பிரதேசத்தில் உள்ள ஜயசுமனராம விகாரையின் தேரரை தாக்கிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட தங்காலை நகர சபை உறுப்பினரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 01 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு தங்காலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

42 வயதுடைய தங்காலை நகர சபை உறுப்பினர் ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

செப்டெம்பர் 03 ஆம் திகதி தங்காலையில் நடைபெற்ற பெரஹெர ஒன்றில் கலந்துகொண்ட நடன குழுவுக்கு பணம் செலுத்துவது தொடர்பில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தங்காலை பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட தங்காலை நகர சபை உறுப்பினரின் தலைமையில் இந்த பெரஹெர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தங்காலை பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலில் ஜயசுமனராம விகாரையின் தேரரும் மற்றுமொரு நபரும் காயமடைந்துள்ளதாகவும் தங்காலை பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் தங்காலை பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபரான தங்காலை நகர சபை உறுப்பினர் செப்டெம்பர் 21 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டுதாகவும் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

இதனை கருத்தில் கொண்ட நீதவான் கைதுசெய்யப்பட்ட தங்காலை நகர சபை உறுப்பினரை ஒக்டோபர் மாதம் 01 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தமிழ் – முஸ்லிம் கட்சிகளுடன் ஜனாதிபதி முக்கிய பேச்சு; அரசியலமைப்பு, மாகாண சபை தேர்தல் குறித்து கவனம்!
செய்திகள்

தமிழ் – முஸ்லிம் கட்சிகளுடன் ஜனாதிபதி முக்கிய பேச்சு; அரசியலமைப்பு, மாகாண சபை தேர்தல் குறித்து கவனம்!

August 3, 2026
ஹெட்டனில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நால்வர் மாயம்!
செய்திகள்

ஹெட்டனில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நால்வர் மாயம்!

August 3, 2026
பசுபிக் பெருங்கடலில் உருவாகும் சூறாவளி; இலங்கையில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு!
செய்திகள்

பசுபிக் பெருங்கடலில் உருவாகும் சூறாவளி; இலங்கையில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு!

August 3, 2026
கடற்படையின் அதிரடி; 677 கிலோவுக்கும் அதிகமான கடத்தல் பீடி இலைகள் பறிமுதல்
செய்திகள்

கடற்படையின் அதிரடி; 677 கிலோவுக்கும் அதிகமான கடத்தல் பீடி இலைகள் பறிமுதல்

August 3, 2026
48 மணி நேர வெள்ள எச்சரிக்கை; களனி, மகாவலி கரையோர மக்களுக்கு அறிவிப்பு
செய்திகள்

48 மணி நேர வெள்ள எச்சரிக்கை; களனி, மகாவலி கரையோர மக்களுக்கு அறிவிப்பு

August 3, 2026
பொதுமக்கள் முறைப்பாடுகளுக்காக ‘118’ சேவை அறிமுகம்; கட்டணமின்றி தகவல் வழங்க புதிய வசதி!
செய்திகள்

பொதுமக்கள் முறைப்பாடுகளுக்காக ‘118’ சேவை அறிமுகம்; கட்டணமின்றி தகவல் வழங்க புதிய வசதி!

August 3, 2026
Next Post
மட்டக்களப்பு மாவட்ட மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலாளர் வழிகாட்டலில் கரையோர சுத்தப்படுத்தல் மற்றும் பனம் விதை நடுதல் நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்ட மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலாளர் வழிகாட்டலில் கரையோர சுத்தப்படுத்தல் மற்றும் பனம் விதை நடுதல் நிகழ்வு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.