உலக தூய்மை தினத்தை முன்னிட்டு ICST பல்கலைக்கழகத்துடன் இணைந்து 23 காலாட்படை ஏற்பாடு செய்த சுற்றுச்சூழலை தூய்மையாக்கும் சிரமதான நிகழ்வு கடந்த 25 ஆம் திகதி, வியாழக்கிழமை காலை 8 மணிமுதல் 1 மணிவரை நடைபெற்றது.
புனானை ICST பல்கலைக்கழக முன்றலில் ஆரம்பமான இப்பணி 5 கட்டங்களாக நாவலடி வரை நடைபெற்றது.
மாணவர்களும் இராணுவ வீரர்களும் என சுமார் 300 இற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்ட இப்பணியில் 15KM இற்கும் அதிகமான வீதியோர குப்பைகள் மிகச்சிறப்பாக அகற்றப்பட்டு, சாலையோர பதாகைகளும் நடப்பட்டது. இதில் இராணுவ உயர் அதிகாரிகள், வீரர்கள் உட்டப பல்கலைக்கழக உயர்பீட உறுப்பினர்கள், மாணவர்கள் என பலர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.














