முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வாவை பிணையில் விடுதலை செய்யுமாறு பாணந்துறை நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (29) உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, அமல் சில்வாவை 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

6 கோடி ரூபாய் பெறுமதியான மூன்று ஜீப் வாகனங்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்து, அதற்கு போலி ஆவணங்களை தயாரித்த குற்றச்சாட்டில் அமல் சில்வா வலான ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா பாணந்துறை நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








