Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கான மரணச் சடங்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கான மரணச் சடங்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

8 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மாற்று திறனாளிகளின் குடும்பங்களில் இடம்பெறும் மரணச் சடங்குகளை நடத்துவதற்கான கூடாரம், கதிரைகள், சமையல் பாத்திரங்களை சிரேஸ்ட ஊடகவியலாளரும், ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ. நிலாந்தன் வழங்கி வைத்தார்.

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஏர்முனை மாற்றுத் திறனாளிகள் அமைப்பில் உள்ள 854 குடும்பங்களில் இடம்பெறும் மரணச் சடங்குகளை நடத்துவதற்கான இருபதுக்கு பத்தடி கொண்ட கூடாரம், 125 கதிரைகள் மற்றும் சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட நான்கு இலட்சத்தி நாற்பத்தைந்தாயிரம் ரூபாய் (445000/-) பெறுமதியான பொருட்கள் செங்கலடி சேவகம் தொண்டு நிறுவனத்தின் ஊடாக சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ.நிலாந்தன் அவர்களினால் பெற்றுக் கொடுக்கப்பட்டது.

பிரான்ஸ் நாட்டில் உள்ள துளிர் அமைப்பின் நிதி உதவியின் கீழ் மேற்படி உதவி வழங்கும் நிகழ்வு இன்றைய (09) தினம் வந்தாறுமூலையில் நடைபெற்றது.

இன் நிகழ்வில் சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ. நிலாந்தன், சேவகம் தொண்டு நிறுவனத்தின் உறுப்பினர்கள் , சமூக சேவகரும் முன்னாள் பி.சபை உறுப்பினருமான என்.மோகனராஜ், சமூக சேவகரும் செங்கலடி ஈஸ்டர் மருந்தக உரிமையாளர் திருமதி.சர்மினி உதயகுமார் , பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அவர்களின் இணைப்பாளர் நிலக்சன்,செங்கலடி வர்த்தக சங்க தலைவர் ஜெகன் ஆகியோருடன் ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மாற்றுத்திறனாளிகள் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருப்தனர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட செங்கலடி வர்த்தக சங்க பொருளாளரும் சமூக சேவகருமான என். மோகன்ராஜ் அவர்கள் இதுவரை காலமும் மாற்று திறனாளிகள் குடும்பத்தில் இடம்பெறும் மரணச் சடங்குகளை செய்வதற்காக மாதாந்தம் வழங்கி வந்த ஐயாயிரம் ரூபாய் நன்கொடையை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மாதாந்தம் பத்தாயிரம் வழங்குவதாகவும், மற்றும் மாற்று திறனாளிகளிள் தின நிகழ்வுகள் விளையாட்டு நிகழ்வுகளுக்கான பரிசு பொருட்களை வாங்கி தருவதாகவும் கூறினார்.

அதேபோல் செங்கலடி ஈஸ்டன் மருந்தகம் மற்றும் மெடிக்கல் உரிமையாளர் திருமதி சர்மினி உதயகுமார் அவர்களினால் இதுவரை காலமும் மாற்று திறனாளிகள் குடும்பத்தில் இடம்பெறும் மரணச் சடங்குகளை செய்வதற்காக மாதாந்தம் வழங்கி வந்த பத்தாயிரம் ரூபாய் நன்கொடையை எதிர்வரும் ஜனவரி மாதத்தில் இருந்து இருபதாயிரம் ரூபாய் வழங்குவதாகவும், மாற்று திறனாளிகளின் சுகவீனம் மற்றும் மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவதற்கான ஆற்றுப்படுத்தல் மருத்துவ முகமை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இலவசமாக செய்து தருவதாகவும் உறுதியளித்தார். மேலும் சர்மினி உதயகுமார் 900 மாற்றுத்திறனாளிகளுக்கான “Bedsheets” வழங்குவதாகவும் உறுதியளித்தார்.

செங்கலடி வர்த்தக சங்க தலைவர் திரு.ஜெகன் மாதாந்தம் 5ஆயிரம் ரூபா பணம் மாற்றுத்திறனாளின் சங்கத்திற்கு வழங்குவதாகவும் உறுதியளித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் கைது
செய்திகள்

ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் கைது

June 20, 2026
O/L பரீட்சையில் 100% சித்தி பெற்று அடாவத்தை திருமகள் தமிழ் வித்தியாலயம் வரலாற்றுச் சாதனை
செய்திகள்

O/L பரீட்சையில் 100% சித்தி பெற்று அடாவத்தை திருமகள் தமிழ் வித்தியாலயம் வரலாற்றுச் சாதனை

June 20, 2026
காணாமற்போனவர்கள் விவகாரம்; 7,000க்கும் மேற்பட்டோரின் அடிப்படை தகவல்கள் சேகரிப்பு
செய்திகள்

காணாமற்போனவர்கள் விவகாரம்; 7,000க்கும் மேற்பட்டோரின் அடிப்படை தகவல்கள் சேகரிப்பு

June 20, 2026
பதுளை – நானுஓயா இடையிலான ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்
செய்திகள்

பதுளை – நானுஓயா இடையிலான ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்

June 20, 2026
மாணவி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு வீடியோ இணையத்தில் வெளியீடு; அதிபர், பிரதி அதிபர் மற்றும் மாணவர் ஒருவர் கைது!
செய்திகள்

மாணவி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு வீடியோ இணையத்தில் வெளியீடு; அதிபர், பிரதி அதிபர் மற்றும் மாணவர் ஒருவர் கைது!

June 20, 2026
சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளுக்கு சிறப்பு நீதிமன்றம் அமைத்து கடும் தண்டனை வழங்க வேண்டும்; அந்தனிசில் ராஜ்குமார்!
காணொளிகள்

சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளுக்கு சிறப்பு நீதிமன்றம் அமைத்து கடும் தண்டனை வழங்க வேண்டும்; அந்தனிசில் ராஜ்குமார்!

June 20, 2026
Next Post
இலங்கையில் பாரிய அளவில் மோட்டார் சைக்கிள்களை களவாடும் கும்பல் கைது

இலங்கையில் பாரிய அளவில் மோட்டார் சைக்கிள்களை களவாடும் கும்பல் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.