“உதிரம் கொடுப்போம் – உயிர் காப்போம்” எனும் தொனிப்பொருளுடன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்தவங்கியின் குருதித் தேவையை பூர்த்தி செய்வதற்காக 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 13 ஆம் திகதி, மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இரத்ததான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்வு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஷ் அவர்களின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்தவங்கி ஊழியர்கள், பிரதேச செயலாளர், நிர்வாக உத்தியோகத்தர், கணக்காளர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு இரத்ததானத்தில் ஈடுபட்டனர்.



















அத்துடன் Zebra Sports Club, NGS Sports Club, New Gold Star Sports Club, ஆரையூர் விளையாட்டுக் கழகம், விபுலாநந்தா விளையாட்டுக் கழகம், மற்றும் இழவேனி விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் ஆகியோரும் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்கள் சமூக பொறுப்பை நிறைவேற்றினர்.
இந்த இரத்ததான நிகழ்வு, சமூக நலனுக்கான ஒற்றுமையையும் மனிதாபிமானத்தையும் வெளிப்படுத்திய ஒரு சிறந்த முன்னுதாரணமாக அமைந்தது.








