Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் பிரதேச சபை உறுப்பினரின் வீட்டிற்கு தீவைத்த விஷமிகள்

மட்டக்களப்பில் பிரதேச சபை உறுப்பினரின் வீட்டிற்கு தீவைத்த விஷமிகள்

8 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உறுகாமம் பகுதியில் உள்ள பிரதேசசபை உறுப்பினர் ஒருவரின் வீட்டிற்கு தீவைக்கப்பட்டுள்ளதுடன் இதன்காரணமாக வீட்டின் ஒரு பகுதி எரிந்துள்ளதுடன் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளும் எரிந்துள்ளது.

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உறுகாமம் பகுதியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏறாவூர் பற்று–செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் சி. சர்வானந்தனின் வீட்டிலேயே இந்த தீச்சம்பவம் ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் நேற்று இரவு 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தீச்சம்பவம் தற்செயலாக ஏற்பட்டதில்லையெனவும் தீவைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேச சபை உறுப்பினர் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில் இதன்போது குறித்த வீட்டிலிருந்த இருந்த பொருட்கள் , கதவு ஜன்னல், கூரை என்பனவற்றில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

இது தொடர்பில் வீட்டு உரிமையாளரான சி. சிவானந்தன் கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

நேற்று இரவு வீட்டில் இல்லாத நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் இது தொடர்பில் உடனடியாக முறைப்பாடுசெய்ததாகவும் இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடயவியல் பொலிஸார், மின்சார சபையினர் விசாரணைகளை முன்னெடுத்தாகவும் பிரதேசசபை உறுப்பினர் தெரிவித்தார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேநேரம் தீசம்பவம் இடம்பெற்ற வீட்டிற்கு வாழைச்சேனை பிரதேசசபையின் தவிசாளர் சுதாகரன் மற்றும் ஏறாவூர்ப்பற்று பிரதேசபை உறுப்பினரும் ஊடகவியலாளருமான செ.நிலாந்தன் ஆகியோர் நேரில்சென்று பார்வையிட்டனர்.

சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் எனவும் இதன்போது கோரிக்கை முன்வைத்தனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கடும் காற்று தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை
செய்திகள்

கடும் காற்று தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை

June 10, 2026
வயிற்றுக்குள் வெடித்த ஐஸ் போதைப்பொருள்; பேருந்து சாரதி உயிரிழப்பு
செய்திகள்

வயிற்றுக்குள் வெடித்த ஐஸ் போதைப்பொருள்; பேருந்து சாரதி உயிரிழப்பு

June 10, 2026
போத்தல்களில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான சில்லறை விலை அதிகரிப்பு
செய்திகள்

போத்தல்களில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான சில்லறை விலை அதிகரிப்பு

June 10, 2026
பிரபாகரனின் மகன் கொலை செய்யப்பட்டிருந்தால் அது யுத்தக் குற்றமாக விசாரிக்கப்பட வேண்டும்; ரவூப் ஹக்கீம்
செய்திகள்

பிரபாகரனின் மகன் கொலை செய்யப்பட்டிருந்தால் அது யுத்தக் குற்றமாக விசாரிக்கப்பட வேண்டும்; ரவூப் ஹக்கீம்

June 10, 2026
சலேவுக்கு ஆதரவான சத்தியாகிரகப் போராட்டம் இடைநிறுத்தம்
செய்திகள்

சலேவுக்கு ஆதரவான சத்தியாகிரகப் போராட்டம் இடைநிறுத்தம்

June 10, 2026
சரத் வீரவன்சவுக்கு வெளிநாட்டு பயணத் தடை
செய்திகள்

சரத் வீரவன்சவுக்கு வெளிநாட்டு பயணத் தடை

June 10, 2026
Next Post
அடுத்த ஆண்டு முதல் தரம் 6 வரையுள்ள மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வழங்கப்படமாட்டாது

அடுத்த ஆண்டு முதல் தரம் 6 வரையுள்ள மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வழங்கப்படமாட்டாது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.