இலங்கையில் மீண்டும் கலவரங்கள் வெடிக்கலாம் எனவும், இது தொடர்பில் அமெரிக்கா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாகவும், குறித்த அறிக்கையில் அமெரிக்கா தனது மக்களுக்கு இலங்கைக்கு பயணம் செய்யவேண்டாம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளதாவும் தெரிவிக்கப்படுகிறது.
ஐபிசி தமிழ் ஊடகத்தில் வெளியான ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த இராணுவ ஆய்வாளரான ஆரூஸ் இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த (15) ஆம் திகதி அமெரிக்கா வெளியிட்டதாக கூறப்படும் அறிக்கையில், இலங்கையில் நடைபெறுகின்ற போராட்டங்கள், கலவரங்களாக மாறலாம் இதனால் ஒருவேளை அமெரிக்கர்கள் அங்கு சிக்குண்டால் அமெரிக்க தூதரகத்தால் கூட காப்பாற்ற முடியாமல் போகலாம் எனவும் அறிக்கை தெரிவிப்பதாக கூறப்படுகிறது.
இவ்வாறு அமெரிக்கா தெரிவித்திருந்தாலும் இலங்கை இதை பெரிதாக எடுக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார், இருந்தாலும் அழுத்தங்கள் காரணமாக இலங்கை இரகசியமான முறையில் இதை கையாள்வதாகவும் அவர் தெரிவித்தார்.








