Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தபால் ஊழியர் இன்மையால் தாமதமடையும் கடிதங்கள்; மட்டக்களப்பில் மக்கள் ஆர்ப்பாட்டம்

தபால் ஊழியர் இன்மையால் தாமதமடையும் கடிதங்கள்; மட்டக்களப்பில் மக்கள் ஆர்ப்பாட்டம்

9 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

தபால் ஊழியர் இன்மையால் தங்களுக்கு கிடைக்கவேண்டிய கடிதங்கள் உரியநேரத்திற்கு கிடைப்பதில்லை என பன்குடாவெளி பதுளை வீதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று முன்தினம் (01) பன்குடாவெளி உப தபாலகத்திற்கு முன்னால் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களே மேற்படி கோரிக்கையை விடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு பன்குடாவெளி, இலுப்படிச்சேனை, பாலர்சேனை, காயன்குடா, கொடுவாமடு, தம்பானம்வெளி, மயிலவெட்டுவான்,மாவடிஓடை, பாலர்சேனை போன்ற கிராமங்களுக்கு உரிய நேரத்தில் கடிதங்கள் சென்றடைவதில்லை எனவும், இரண்டு பேர் பணியாற்றிய பன்குடாவெளி உப தபால் அலுவலகத்தில் தற்போது ஒருவர் மாத்திரமே கடமை புரிவதால் உரிய நேரத்திற்கு தபால் வினியோகம் செய்யமுடியாத நிலை காணப்படுவதால் தங்களுக்கு கிடைக்க வேண்டிய கடிதங்கள் உரிய நேரத்திற்கு கிடைப்பதில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.

“பன்குடாவெளி உப தபால் நிலையம் உள்ள பிரதேசத்தில் 8 பாடசாலைகள், நான்கு நான்கு இராணுவ முகாம்கள், ஆயுள்வேத வைத்தியசாலை, கமநல சேவை நிலையங்கள் ,மூன்று நூலகங்கள், வனவள அதிகாரி அலுவலகம், என பல அரச தனியார் திணைக்களங்கள் இருக்கும் நிலையில் அனைத்துக்கும் ஒருவரே கடிதங்களை விநியோகம் செய்து வருவதால் உரிய நேரத்திற்கு கடிதங்கள் கிடைப்பதில்லை என்பதுடன் பல தடவைகள் காலாவதியான கடிதங்களே எமது கைகளில் கிடைக்கின்றன. எனவே இது குறித்து உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி தபால் ஊழியர் ஒருவரை நியமித்து தருமாறு கேட்டுக் கொள்கின்றோம்” என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அநுர அரசாங்கம் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

செம்மணி அகழாய்வு 100 நாள் மைல்கல்; மொத்த மனித எலும்புக்கூடுகள் 507 ஆக உயர்வு
செய்திகள்

செம்மணி அகழாய்வு 100 நாள் மைல்கல்; மொத்த மனித எலும்புக்கூடுகள் 507 ஆக உயர்வு

August 7, 2026
பல்லன்சேன சிறைச்சாலை அமைதியின்மை; காயமடைந்த 28 கைதிகள் வெலிக்கடை சிறை வைத்தியசாலைக்கு மாற்றம்!
செய்திகள்

பல்லன்சேன சிறைச்சாலை அமைதியின்மை; காயமடைந்த 28 கைதிகள் வெலிக்கடை சிறை வைத்தியசாலைக்கு மாற்றம்!

August 7, 2026
சிறைச்சாலைச் சம்பவங்கள் குறித்து நீதி அமைச்சரின் விசேட உரை!
செய்திகள்

சிறைச்சாலைச் சம்பவங்கள் குறித்து நீதி அமைச்சரின் விசேட உரை!

August 7, 2026
நாடளாவிய ரீதியில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 508 பேர் கைது!
செய்திகள்

நாடளாவிய ரீதியில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 508 பேர் கைது!

August 7, 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்; வௌியானது வர்த்தமானி!
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்; வௌியானது வர்த்தமானி!

August 7, 2026
நாட்டில் தொடரும் சிறைக்கலவரங்கள்; முப்படையினருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!
செய்திகள்

நாட்டில் தொடரும் சிறைக்கலவரங்கள்; முப்படையினருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

August 7, 2026
Next Post
மாமாங்கம் பகுதியில் சிரமதானம் முன்னெடுப்பு

மாமாங்கம் பகுதியில் சிரமதானம் முன்னெடுப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.