அம்பலாங்கொடை நகரில் இன்று (9) காலை வர்த்தக கட்டிடத் தொகுதி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த தீயை கட்டுப்படுத்துவதற்காக காலி மாநகர சபைக்கு சொந்தமான 2 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டு, பின்னர் பெரும் கஷ்டங்களுக்கு மத்தியில் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
குறித்த கடைத்தொகுதியில் உள்ள அனைத்து கடைகளுக்கும் தீக்கிரையாகியுள்ளது.
அத்தோடு தீவிபத்து ஏற்பட்ட காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.















