தொழிநுட்ப அச்சுறுத்தல்களுக்கு, குறிப்பாக சைபர்வெளியில் எழும் சவால்களுக்கு பதிலளிக்கும் திறன் கொண்ட ஒரு பாதுகாப்புப் படையை உருவாக்குவதே அரசாங்கத்தின் கொள்கை என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
அத்துடன், நாட்டின் கடல் மற்றும் வான்வெளிப் பாதுகாப்பை பலப்படுத்தும் அரசாங்கத்தின் நோக்கம் என்று அவர் குறிப்பிட்டார்.
இனங்களுக்கிடையேயான பதற்றங்கள் ஆயுத மோதல்களாக மாறக்கூடும் என்ற கவலைகளை அவர் நிராகரித்துள்ளார்.
இலங்கையின் பாதுகாப்புப் படைகளுக்கு இந்தியா மற்றும் அமெரிக்கா தொடர்ந்து ஆதரவை வழங்கி வருகின்றன.

இந்தியாவானது 70 ஜீப்களுடன் பல்வேறு தொழில்நுட்ப உதவிகளை வழங்கியுள்ளதுடன், முப்படைகளின் திறன் நிலைகளை மேம்படுத்த ஒரு தொழில்நுட்ப அகாடமியை நிறுவ ஆதரவு அளிக்க முன்மொழிந்துள்ளது.
மேலும், அமெரிக்கா 2026 ஆம் ஆண்டில் இலங்கைக்கு 10 TH-57 ஹெலிகொப்டர்களை அன்பளிப்பாக வழங்க உறுதியளித்துள்ளது.
அத்துடன், அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா இணைந்து, C-130 ரகத்தைச் சேர்ந்த இரண்டு போக்குவரத்து விமானங்களை 2026 மற்றும் 2027ஆம் ஆண்டுகளில் இலங்கை விமானப்படைக்கு அன்பளிப்பாக வழங்கவுள்ளன.
KA-360 மற்றும் KA-350 பீச்கிராப்ட் விமானங்கள் ஏற்கனவே அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவால் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.








